search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural"

    • ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
    • வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏர்வாடி:

    வேளாண்மை துறை சார்பில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் களக்காடு சிங்கிகுளம் பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.

    இத்திட்டத்தை பற்றிய விரிவான கருத்தாக்கத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது வழங்கினார். சிங்கிகுளம் கால்நடை உதவி மருத்துவர் ஜான் ரவிகுமார் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்யும் செயல் விளக்கத்தை எடுத்துரைத்தார்.

    வேளாண்மை பொறியியல்துறையின் திட்டங்களை உதவி பொறியாளர் அருணா விளக்கி கூறினார். தோட்டக்கலையின் திட்டங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் முத்துவிநாயகம் விளக்கி கூறினார்.

    வேளாண் வணிக துறை சார்ந்த திட்டங்களை உதவி வேளாண் அலுவலர் முத்து வீர் சிங் விளக்கி கூறினார். பல்வேறு வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    உதவி கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார். இதில் களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி செய்திருந்தார். கோவிலம்மாள்புரம் வேளாண்மை அலுவலர் வானுமாமலை, தோட்டக்கலை அலுவலர் இசக்கியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்துல் ரவூப், செங்களாகுறிச்சி கிராம துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி, உதவி கால்நடை மருத்துவர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ‌. ஏற்பாட்டில் சுயதொழில், விவசாய கருத்தரங்கம் களக்காடு அருகே நாளை மறுநாள் நடைபெறுகிறது.
    • படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    நெல்லை:

    நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரி-களக்காடு சாலையில் கடம்போடு வாழ்வு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நாளை மறுநாள் (11-ந் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறு, குறு கிராமிய தொழில்கள் மற்றும் வர்த்தக கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    கருத்தரங்கில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    எங்கே, எப்படிப்பட்ட லாபகரமான தொழில் தொடங்கலாம், அரசு மற்றும் வங்கிகளில் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி? ஒவ்வொரு தொழிலுக்கும் அனுமதி பெற யாரை அணுகுவது? தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை எங்கே பெறலாம்? லாபகரமான விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செய்வது எப்படி? உள்ளிட்ட பயிற்சிகள் கருத்தரங்கில் வழங்கப்படும்.

    ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு சிறு, குறு கிராமிய தொழில் முனைவோர் சங்கத்தின் நெல்லை கிளை உதவியோடு, மாவட்ட தொழில் மையம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் மற்றும் வங்கிகள் ஆதரவுடன் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    பல பொருட்கள் தயாரிப்பது எப்படி என்கிற நேரடி செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.சுயதொழில் தொடங்க கடனுதவி கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு கடன் உதவிகளுக்கான ஆணைகளும் வழங்கப்படும்.

    கடனுதவி பெற விரும்புவோர், தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தொழில் திட்டத்துடன் (எந்திரங்கள் விலை) அன்றைய தினமே விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விடலாம்.

    சிறு, குறு கிராமிய தொழில்கள் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு, தேநீர், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கருத்தரங்கம் நடைபெறும் நாள் காலை 8 மணிக்கு நாங்குநேரி மற்றும் களக்காடு பஸ் நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தொழில் முனைவோர், சுயதொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் விவசாய தொழில் செய்வோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விளாத்திகுளத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வட்டார வேளாண் துறை சார்பில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கே.குமரெட்டையாபுரம், கீழ விளாத்திகுளம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு வேளாண் துறை கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாய உபகரணங்கள் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு கூட்டுப் பண்ணையத்திட்டத்தில் குழு ஒன்றுக்கு அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம் மதிப்பில் டிராக்டருடன் பொருத்தகூடிய வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி விளாத்திகுளம் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தலைமை தாங்கினார்.

    வேளாண்மை துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, கே.குமரெட்டையாபுரம், கீழ விளாத்திகுளம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், நகர செயலாளர் வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை துணை அலுவலர் முத்துச்சாமி, விளாத்திகுளம் வட்டார வயலக ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு, உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், அருள் பிரகாஷ், சரண்யா, சுதாகர், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் பயிர் அறுவடைபரிசோதனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், வேளாண்மையை எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    வேளாண்மைக் கருவிகளும், எந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், சிறு, குறு ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை எந்திரமயமாக்கலின் உப இயக்கம் திட்டங்களின் கீழ் டிராக்டர், பவர் டில்லர், சுழற்கலப்பை, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், நேரடி நெல் விதைப்புக் கருவி, விசை களையெடுக்கும் எந்திரங்கள் போன்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் 1080 பயனாளிகளுக்கு ரூ.783.71 லட்சம் மானிய விலையில் இத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகளை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை www.agrimachinery.nic.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவும், உழவன் செயலியின் வாயிலாகவும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தையும், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி வட்டார விவசாயிகள் 04562 - 252192 என்ற தொலைபேசி எண்ணிலும், சாத்தூர், சிவகாசி, வெம்பக் கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் 04563-289290 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்ல வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    லாலாபேட்டை:

    கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) மணி மேகலை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்சமயம் காவேரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் தங்களது நிலங்களை நெல் பயிரிடுவதற்க்கு தயார் படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தற்சமயம் சிஓஆர் 50, பிபிடி 5204, டிகேஎம் 13 போன்ற 130 முதல் 135 நாட்கள் வயதுடைய சன்னரகங்கள் இருப்பில் உள்ளன.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டாமற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்லலாம். அனைத்து நெல் பயிரிடும் விவிசாயிகளுக்குதங்களுக்கு தேவையான ரகங்களை விதைத்து பயன் பெற வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தங்கள் நெல் விதைகளை தேர்வு செய்யும் போது விதைப்பு நாளில் இருந்து அறுவடை நாளினை கணக்கீட்டு ஜனவரிமுதல் வாரத்தில் பின் அறுவடை அமையும்மாறு விதைப்பு செய்ய வேண்டும், ஏனெனில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு அடையாதவாறு விதைப்பு காலத்தை தேர்வு செய்வது அவசியம் ஆகும். இல்லை யெனில் அறுவடைகால முதிர்வு தருணத்தில் மழையினால் நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு தகுந்தார் போல ஆகஸ்ட் மாத 2ம் வாரத்தில் பின் நாற்று விடுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×