search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy seed"

    • வயல் வரப்புகளை சுற்றி புடவைகளை கட்டி வைத்து பாதுகாத்தனர்
    • பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கோடைகால பருவத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இதனால் கோடை காலத்திற்கு உகந்த நெல் ரகங்களான கோ-51 மகேந்திரா-606 ஏ.டி.டி-37 உள்ளிட்ட நெல் ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கோடைகால பட்டத்தில் நெல் விதைகளை விதைத்து பயிர் செய்துள்ளனர்.

    மேலும் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன.

    இந்நிலையில் நெற் பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதி படுகின்றனர்.

    இதனால் விவசாயிகள் வயல் வரப்புகளை சுற்றி புடவைகளை கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    • விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களையும் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி ஆய்வு செய்தார். அப்போது விற்பனை உரிமம், இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, கொள்முதல் பட்டியல், பதிவேடுகள், பதிவுச்சான்றிதழ், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்தார். விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது விதை இருப்பிற்கும், பதிவேடு இருப்பிற்கும் வேறுபாடு இருந்தது. இதனால் ரூ.72 ஆயிரம் மதிப்பிலான 2,250 கிலோ எடை அளவிலான விதை குவியலை விற்பனை செய்ய தடை விதித்தார்.

    மேலும் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் மீது விதை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாயிகளுக்கு பட்டத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆய்வின்போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர்.
    • விவசாயிகள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். நெல் விதை வாங்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய நெல் விதைகளை விதை உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். சான்றட்டையில் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையினால் தர உத்திரவாத விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார நிலை விதைகளின் சான்றட்டை வெண்மை நிறத்திலும், சான்று நிலை விதைகளின் சான்றட்டை நீல நிறத்திலும் இருக்கும். சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்குவது சிறந்தது.

    விவசாயிகள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். வாங்கும் விதைகளுக்கு விற்பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விபரம் குறிப்பிட்ட விற்பனைப் பட்டியலை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தனியார் நிறுவனங்களின் நெல் விதைகளை வாங்கும் விவசாயிகள் விதை மூட்டைகளில் உள்ள உண்மை நிலை விபர அட்டையில் குறிப்பிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி (சென்னை) தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- உலகத்துக்கே உணவு வழங்கும் உற்பத்தித் தொழிலான விவசாயத்தின் முக்கிய இடுபொருளாக விதைகள் உள்ளது.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை உற்பத்தி செய்யும் பணியை விதை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை தன்னிறைவு பெறச் செய்ததில் நமது மாவட்டத்தின் பங்கு முக்கியமானது. தற்போது விவசாயிகளிடையே குண்டு நெல் ரகங்களான சாவித்திரி, சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது. தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக அரசு கொள்முதல் நிலையங்களில் சிகப்பு நிற மட்டை அரிசி ரகமான டிகேஎம் 9 ரகம் கொள்முதல் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.கே.எம். 9 ரகம் தவிர அனைத்து குண்டு ரகங்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

    எனவே விதை உற்பத்தியாளர்களும் டிகேஎம் 9 தவிர மற்ற ரக நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விதைச் சான்றுத்துறை அலுவலர்களை நேரடியாக ஒரே இடத்தில் சந்தித்து பயன் பெறும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விதை வளாகம் கட்டப்படவுள்ளது. இதற்கென ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விதைச் சான்றுத்துறை, விதை ஆய்வுத்துறை மற்றும் விதை பகுப்பாய்வு நிலையம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமையவுள்ளது. இது விவசாயிகளுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இ்வ்வாறு அவர் கூறினார்.  

    கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்ல வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    லாலாபேட்டை:

    கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) மணி மேகலை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்சமயம் காவேரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் தங்களது நிலங்களை நெல் பயிரிடுவதற்க்கு தயார் படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தற்சமயம் சிஓஆர் 50, பிபிடி 5204, டிகேஎம் 13 போன்ற 130 முதல் 135 நாட்கள் வயதுடைய சன்னரகங்கள் இருப்பில் உள்ளன.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டாமற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்லலாம். அனைத்து நெல் பயிரிடும் விவிசாயிகளுக்குதங்களுக்கு தேவையான ரகங்களை விதைத்து பயன் பெற வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தங்கள் நெல் விதைகளை தேர்வு செய்யும் போது விதைப்பு நாளில் இருந்து அறுவடை நாளினை கணக்கீட்டு ஜனவரிமுதல் வாரத்தில் பின் அறுவடை அமையும்மாறு விதைப்பு செய்ய வேண்டும், ஏனெனில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு அடையாதவாறு விதைப்பு காலத்தை தேர்வு செய்வது அவசியம் ஆகும். இல்லை யெனில் அறுவடைகால முதிர்வு தருணத்தில் மழையினால் நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு தகுந்தார் போல ஆகஸ்ட் மாத 2ம் வாரத்தில் பின் நாற்று விடுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×