காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் அவதி

வயல் வரப்புகளை சுற்றி புடவைகளை கட்டி வைத்து பாதுகாத்தனர் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது
காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் அவதி
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கோடைகால பருவத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் கோடை காலத்திற்கு உகந்த நெல் ரகங்களான கோ-51 மகேந்திரா-606 ஏ.டி.டி-37 உள்ளிட்ட நெல் ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்துள்ளனர்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கோடைகால பட்டத்தில் நெல் விதைகளை விதைத்து பயிர் செய்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன.

இந்நிலையில் நெற் பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதி படுகின்றனர்.

இதனால் விவசாயிகள் வயல் வரப்புகளை சுற்றி புடவைகளை கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com