search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணராயபுரத்தில் விதை நெல் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு- வேளாண் அதிகாரி தகவல்
    X

    கிருஷ்ணராயபுரத்தில் விதை நெல் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு- வேளாண் அதிகாரி தகவல்

    கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்ல வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    லாலாபேட்டை:

    கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) மணி மேகலை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்சமயம் காவேரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் தங்களது நிலங்களை நெல் பயிரிடுவதற்க்கு தயார் படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தற்சமயம் சிஓஆர் 50, பிபிடி 5204, டிகேஎம் 13 போன்ற 130 முதல் 135 நாட்கள் வயதுடைய சன்னரகங்கள் இருப்பில் உள்ளன.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டாமற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்லலாம். அனைத்து நெல் பயிரிடும் விவிசாயிகளுக்குதங்களுக்கு தேவையான ரகங்களை விதைத்து பயன் பெற வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தங்கள் நெல் விதைகளை தேர்வு செய்யும் போது விதைப்பு நாளில் இருந்து அறுவடை நாளினை கணக்கீட்டு ஜனவரிமுதல் வாரத்தில் பின் அறுவடை அமையும்மாறு விதைப்பு செய்ய வேண்டும், ஏனெனில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு அடையாதவாறு விதைப்பு காலத்தை தேர்வு செய்வது அவசியம் ஆகும். இல்லை யெனில் அறுவடைகால முதிர்வு தருணத்தில் மழையினால் நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு தகுந்தார் போல ஆகஸ்ட் மாத 2ம் வாரத்தில் பின் நாற்று விடுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×