search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk meeting"

    சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில்அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின்பு ஜெயலலிதா தான் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்தினார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்த தொகுதியில் பலமுறை எம்.பி.யாக இருந்த ப.சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தார். ஏதாவது திட்டங்களை கொண்டு வந்துள்ளாரா. சாமானிய மக்களால் அவரை சந்திக்க தான் முடியுமா.

    இன்று (புதன்கிழமை) கிராமம் கிராமமாக சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மாணவரணி செயலாளர் என்.எம்.ராஜா, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், முன்னாள் தலைவர் மானாகுடி சந்திரன், மகளிரணி பொருளாளர் கயல்விழி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் எறும்பகுடி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துபாண்டி நன்றி கூறினார். 
    அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் நடைபெற்றது. ஞானபிரகாசம், கிளைச் செயலாளர் திருமணவேல், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், மாணவரணி செயலாளர் ஸ்டான்லி ஞான பிரகாஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன். புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். 

     கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 400 பேருக்கு சேலைகளும், 100 பேருக்கு வேஷ்டியும் மற்றும் அப்பகுதியில் கல்வியில் தேர்ச்சி பெற்ற 8 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாட்ச் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசினார். 

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் நடராஜன், கருணாநிதி, அப்துல்ஹமீது, பழனிகுமார், பொன்ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொன் முருகேசன், திருமணவேல், தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  

    கூட்டத்தில் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் திருபாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், மாவட்ட மகளிரணி செரீனா பாக்யராஜ், முன்னாள் யூனியன் துணை சேர்மன் ஜெயராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது இப்ராகிம், பாண்டிராஜ், அப்துல்ரஷீத், பிள்ளைவிளை பால்துரை, கார்த்தீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தட்டார்மடம் சந்திரசேகர் நன்றி கூறினார்.
    சிவகிரியில் வாசு தேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்றார்.
    சிவகிரி:

    சிவகிரியில் வாசு தேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்திபாண்டியன், மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாமிவேல், துணை செயலாளர் பெரியதுரை, மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஆயில்ராஜாபாண்டியன், சின்னத்துரை, குருசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் துக்காண்டி வரவேற்றார். காசிராஜன் தொகுத்து வழங்கினார். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாநகர பேரவை செயலாளர் ஜெரால்டு, சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், தீக்கனல் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் முகம்மது உசேன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன் செய்திருந்தார்.
    ஆரணியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பக்தி பாடல் பாடியதால் 15க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
    ஆரணி:

    ஆரணி காமக்கூரில் நேற்றிரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் வேலு வரவேற்றார்.

    வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.

    கூட்டத்தில், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ‘இது ஆன்மீக பூமி, நான் இந்து சமய அறநிலையத்துறையாக இருப்பதால் பக்தி பாடல் பாடுங்கள். பின்னர் பேச்சை தொடங்கலாம் என்றார்.

    அமைச்சர் கேட்டுக்கொண்டதால், பேச்சாளர் செல்வராஜ் ‘மேல்மலையனூர் அங்காளியே’ என்ற அம்மன் பக்தி பாடலை இசையுடன் பாடினார். அப்போது, திரண்டிருந்த பெண் தொண்டர்களில் 15-க்கும் மேற்பட்டோர் தலைவிரி கோலத்துடன் சாமி ஆடினர்.

    இதையடுத்து, தண்ணீர் கொடுத்து சாமி ஆடிய பெண்களை தொண்டர்கள் சமரசப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் பேசியதாவது:- காமக்கூர், நடுக்குப்பம், குன்னத்தூர், சம்புவராய நல்லூர் ஆகிய கிராமங்களில் ரூ.59 லட்சத்தில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். #ADMK



    பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. #admkmeeting
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமி ழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்க ராணுவத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளியாக அறிவித்து விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. 

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கடந்த பார்லிமெண்ட், சட்டசபை தேர்தல்களில் தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில்களில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட தயாரா? அதற்கு அந்த கட்சிக்கு திராணி உள்ளதா என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி சாவல் விட்டார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் எம்.எல்.ஏ. பேசுகையில், இலங்கையில் நடந்த போரில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசு காரணமாக இருந்துள்ளது. இதனால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளி அறிவித்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்றார். எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ்ச் செல்வன் உட்பட பலர் பேசினர்.

    இதில் ஒன்றிய செயலாளர் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, சுரேஷ், பேரூர் செயலாளர்கள் வினோத், ரெங்கராஜ், செல்வராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, பூவைசெழியன், லட்சுமி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், சாகுல் அமீது, ராஜேஸ்வரி, வீரபாண்யன், ரமேஷ், முத்தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் முகமது இக்பால், எசனை பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். #admkmeeting
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.

    வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.

    கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.

    நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருக்கும்போது எப்படி வெற்றியை தந்தீர்களோ அதே போல் தொண்டர்கள் தங்கள் முழு திறமையும் பயன்படுத்தி முழு வெற்றியை தரவேண்டும்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,

    தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.

    தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
    திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
    பொன்னேரி:

    திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாரில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்.பி.க்.கள் வேணுகோபால், வெங்கடேஷ் பாபு, திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பரிமேழலகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, சுமித்ராகுமார், சங்கர், செல்வகுமார், 11-வது வார்டு செயலாளர் வெற்றிவேல், ராமலிங்கம், உபயதுல்லா, செந்தில் குமார், சம்பத், சவுகத்அலி சலிம், நாகராஜ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
    திருப்பரங்குன்றத்தில் நாளை அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்று ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மாவின் நல்லாசியுடன், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 95, 96 ஆகிய வார்டு களின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகதம் மகாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது

    மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனி யாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் நிலை யூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட் டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.

    நிகழச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், மாணிக்கம், சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் செயல்வீரர்களும், செயல்வீரங்கனைகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி பொன்னழகு சின்னராசு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன், நகர பேரவை செயலாளர் சக்திவேல், பொதுகுழு உறுப்பினர் வீரசுப்பிரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரேமா முன்னிலை வகித்தனர்.

    தலைமை கழக பேச்சாளர் பண்ணை கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர்கள் செல்வராஜ், சம்ஸ்கனி பேசினர்.

    பாலையம்பட்டி ஊராட்சி செயலாளர் குருசாமி, கிளை செயலாளர்கள் சந்திரன், பெருமாள், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம். நகர செயலாளர் கண்ணன், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை ஆகியோர் செய்திருந்தனர். செம்பட்டி கிளை செயலாளர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.

    மதுரை புதூரில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகிறார்.

    மதுரை:

    மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் புதூர் பஸ் நிலையம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு பகுதி செயலாளர் எம்.என்.முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், 46-வது வட்ட செயலாளர் கே.வி.கே.கண்ணன் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன் மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்கள் பேசுகிறார்கள்.

    கூட்டத்தில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×