என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை புதூரில் இன்று மாலை அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகிறார்
மதுரை:
மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் புதூர் பஸ் நிலையம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்துக்கு பகுதி செயலாளர் எம்.என்.முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், 46-வது வட்ட செயலாளர் கே.வி.கே.கண்ணன் முன்னிலை வகிக்கிறார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன் மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்கள் பேசுகிறார்கள்.
கூட்டத்தில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்