search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தட்டார்மடத்தில் அதிமுக பொதுக்கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    தட்டார்மடத்தில் அதிமுக பொதுக்கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் நடைபெற்றது. ஞானபிரகாசம், கிளைச் செயலாளர் திருமணவேல், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், மாணவரணி செயலாளர் ஸ்டான்லி ஞான பிரகாஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன். புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். 

     கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 400 பேருக்கு சேலைகளும், 100 பேருக்கு வேஷ்டியும் மற்றும் அப்பகுதியில் கல்வியில் தேர்ச்சி பெற்ற 8 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாட்ச் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசினார். 

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் நடராஜன், கருணாநிதி, அப்துல்ஹமீது, பழனிகுமார், பொன்ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொன் முருகேசன், திருமணவேல், தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  

    கூட்டத்தில் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் திருபாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், மாவட்ட மகளிரணி செரீனா பாக்யராஜ், முன்னாள் யூனியன் துணை சேர்மன் ஜெயராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது இப்ராகிம், பாண்டிராஜ், அப்துல்ரஷீத், பிள்ளைவிளை பால்துரை, கார்த்தீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தட்டார்மடம் சந்திரசேகர் நன்றி கூறினார்.
    Next Story
    ×