search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shanmuganathan"

    • தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    • தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஆர்ப்பாட்டம்

    அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 12 பேரூராட்சியிலும், 13-ந் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டிணம், திருச்செந்தூர் நகராட்சியிலும், 14-ந் தேதி 7 ஒன்றியங்கள் ஆக மொத்தம் 22 இடங்களில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும்.

    அதிக அளவில் தொண்டர்கள் கூட்டத்தை திரட்டி மக்களிடம் நம் கோரிக்கைகள் சென்றடைய வேண்டும். நம் கட்சி வலு வான கட்சி என்பதை மக்க ளிடம் கொண்டு சென்று வலுப்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்ற நிலைக்கு வர வேண்டும். தேர்தலை பொறுத்தவரை சிலவிஷயங்களை சகித்து தான் செல்ல வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் பலமான எதிர்கட்சி அ.தி.மு.க தான் என்பதை மக்களிடம் எடுத்துக்கூறி, ஆர்ப்பாட்டத்தை வெற்றி கரமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சவுந்தரபாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், ஜெ.தனராஜ், பிரபாகர், பகுதி செயலாளர்கள் முருகன் ஜெய்கணேஷ் வட்ட செயலாளர்கள் முருகன், மனுவேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார்.

    சண்முகநாதன்

    இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், முருகன், ஜெய்கணேஷ், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, ஜெயராணி, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன் வரவேற்றார். கூட்டத்தில தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஸ்டிக்கர் ஒட்டி

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார். சோதனையை கடந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதனையை படைப்பார். அவரது பக்கம் 99 சதவீதம் பேர் இருக்கின்றனர். ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

    தமிழக மக்களுக்காக பாடுபடும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்வரும் தேர்தலையும் எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆவார். அண்ணாவின் வழியில் அவரது கொள்கைகளை தாங்கி வெற்றிக்கனியை பறிப்போம். தமிழக அரசு எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இலவச சேலை

    பின்னர் 250 பேருக்கு இலவச சேலை வழங்கினார். தொடர்ந்து தலைமை பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், வைகை பாண்டி, ஞானதாஸ் உள்பட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மருத்துவ அணி செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வக்கீல் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், இளைஞர் -இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்கள் சத்யாலட்மணன், முருகன், இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் வலசை வெயிலுமுத்து, வக்கீல் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச்செயலாளர் கோமதி மணிகண்டன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, நிர்வாகிகள் வக்கீல் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள், குமார், உதயகுமார், வட்டச் செயலாளர்கள் உலகநாதன், வெங்கடேஷ், திருச்சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் நட்டார்முத்து நன்றி கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன.
    • ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை. மிரட்டுகிறவர்களுக்கு பயந்து பதவியை விட்டு விலகினால், இயக்கத்தை எப்படி வழிநடத்த முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன. அதனை அவர் தைரியமாக எதிர்கொண்டார்.

    பெருந்தன்மையுடன் அ.தி.மு.க. வளர வேண்டும் என்பதற்காக எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை அமைக்க வழிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர்கள் வசந்தா, சந்தனம், பொருளாளர் அமலிராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, துணைச் செயலாளர் வலசை வெயிலூமுத்து,அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா,மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், இளைஞர்பாசறை தனராஜ்,சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர் பிரபாகர், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், முனியசாமி, சரவணபெருமாள், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து , சேவியர், ஓன்றிய செயலாளர் காசிராஜன், பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ,துணைச் செயலாளர் டைகர் சிவா, மற்றும் ரமேஷ் கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் நடைபெற்றது. ஞானபிரகாசம், கிளைச் செயலாளர் திருமணவேல், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், மாணவரணி செயலாளர் ஸ்டான்லி ஞான பிரகாஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன். புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். 

     கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 400 பேருக்கு சேலைகளும், 100 பேருக்கு வேஷ்டியும் மற்றும் அப்பகுதியில் கல்வியில் தேர்ச்சி பெற்ற 8 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாட்ச் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசினார். 

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் நடராஜன், கருணாநிதி, அப்துல்ஹமீது, பழனிகுமார், பொன்ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொன் முருகேசன், திருமணவேல், தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  

    கூட்டத்தில் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் திருபாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், மாவட்ட மகளிரணி செரீனா பாக்யராஜ், முன்னாள் யூனியன் துணை சேர்மன் ஜெயராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது இப்ராகிம், பாண்டிராஜ், அப்துல்ரஷீத், பிள்ளைவிளை பால்துரை, கார்த்தீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தட்டார்மடம் சந்திரசேகர் நன்றி கூறினார்.
    ×