search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜன்செல்லப்பா"

    மதுரையில் நாளை அண்ணாவின் 110-வது பிறந்தநாளை யொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அமைச்சர் செல்லூர்ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார். #ADMK #Sellurraju
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந்தேதி) காலை 9 மணிக்கு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Sellurraju
    திருப்பரங்குன்றத்தில் நாளை அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்று ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மாவின் நல்லாசியுடன், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 95, 96 ஆகிய வார்டு களின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகதம் மகாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது

    மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனி யாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் நிலை யூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட் டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.

    நிகழச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், மாணிக்கம், சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் செயல்வீரர்களும், செயல்வீரங்கனைகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×