search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    அருப்புக்கோட்டை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி பொன்னழகு சின்னராசு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன், நகர பேரவை செயலாளர் சக்திவேல், பொதுகுழு உறுப்பினர் வீரசுப்பிரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரேமா முன்னிலை வகித்தனர்.

    தலைமை கழக பேச்சாளர் பண்ணை கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர்கள் செல்வராஜ், சம்ஸ்கனி பேசினர்.

    பாலையம்பட்டி ஊராட்சி செயலாளர் குருசாமி, கிளை செயலாளர்கள் சந்திரன், பெருமாள், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம். நகர செயலாளர் கண்ணன், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை ஆகியோர் செய்திருந்தனர். செம்பட்டி கிளை செயலாளர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.

    Next Story
    ×