search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abortion"

    • போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
    • கருக்கலைப்புக்கு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பனியன் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் திருப்பூரில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற வாலிபர்கள், போதை மாத்திரை கேட்டு கடை உரிமையாளரை தாக்கியதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இதற்கிடையே திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரபாண்டி பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது அதுபோன்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கருக்கலைப்புக்கு தொடர்பான மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
    • மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ட அமுதா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதாவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதும், அவர் முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும் தெரியவந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது.

    உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருக்கலைப்புக்கான மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

    மேலும், மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    • தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார்.
    • இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவரது மனைவி அமுதா (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அமுதா மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார். அதில் பெண் சிசு என தெரிய வந்ததால் கருவை கலைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை யொட்டி அந்த மருந்தகத்தில் கருவை கலைப்ப தற்கான மாத்திரைகள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அமுதவிற்கு ரத்தப்போக்கு இருந்ததாகவும் இதனால் அருகே உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் மருந்தகத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறதா? கருக்கலைப்பு செய்யப்பட்டதா? கருக்கலைப்பு செய்வதற்கான உபகரண ங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  இதில் கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உள்ளார். இவர் ஐ.டி.ஐ மட்டும் முடித்துள்ளதாகவும், முறையாக அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும், மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது. இதேபோல் விருகாவூர், மலைக்கோட்டாலம், இந்திலி ஆகிய பகுதிகளில் இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். வடிவேல் மீது கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கருக்கலைப்பு செய்ததாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
    • சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது.

    தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

    சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.

    திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமான இளம்பெண்கள் போலி டாக்டர் தம்பதியிடம் கருக்கலைப்பு செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக புகார் வந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் அங்கு திடீர் நேரடி ஆய்வு நடத்தினர்.

    அப்போது பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில் சோதனை நடத்தினர். கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த கவிதா (வயது 41), அவரது கணவர் பிரபு (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஐ.பி.சி. 419, 420, 315 மற்றும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆக்ட் 1956 15(3) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


    போலி பெண் டாக்டர் கவிதா 10-ம் வகுப்பும், கணவர் பிரபு பிளஸ்-2 படித்துள்ளனர். தன்னுடைய மெடிக்கல் ஷாப்பில் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த குற்றத்துக்காக ஏற்கனவே 2 முறை பிரபு கைது செய்யப்பட்டவர். கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    அதில், நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 பெண்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் வந்து சென்றது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அங்கு ஏராளமான கர்ப்பிணி பெண்களின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளும் சிக்கி இருக்கிறது. ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், 4 ஆயிரம் பெண் சிசுக்கள் வரை கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    பெண் குழந்தைகள் வேணடாம் என நினைக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

    கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இங்கு கைப்பற்றிய செல்போன் எண்களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த கடையின் உரிமையாளர் கவிதா (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து கவிதா அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கவிதா 10-ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த மருத்துவ உபகரணங்கள், கருக்கலைப் பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டு பேன்ஸி ஸ்டோருக்கு சீல் வைத்தனர்.


    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பிற்கு தொடர்பு கொண்டதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10-ம் வகுப்பு படித்த கவிதா என்ற பெண்ணிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து நடத்திய ஆய்வில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோர் போல் இருந்தது. உட்பகுதியில் கிளினீக், மருந்து பொருட்கள் மற்றும் கருக்கலைப்பிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தது.

    செல்போன் எண்ணை வைத்து தான் இந்த இடத்தை கண்டறியப்பட்டது. கிரிவலப்பதையில் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் சந்தேகப்படாத வகையில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோரும் வைத்திருந்தனர்.

    இப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது நாள்தோறும் 2-க்கும் மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய வந்து சென்றது தெரியவந்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக கவிதா மற்றும் அவரது கணவர் பிரபு கருக்கலைப்பை தொழிலாக நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இதுவரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம்.

    முதற்கட்டமாக கிளினீக் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீட்டில் ஆய்வு செய்யப்படும்.

    தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கருக்கலைப்புக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் இந்த செயலில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய ஆய்வில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிய ரூ.6 ஆயிரம், கருக்கலைப்பு ரூ.15 ஆயிரம் வசூலித்து பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் டாக்டர் ஆனந்தி மற்றும் அவரது கணவர் தமிழ்செல்வன் வீட்டில் ரகசிய அறையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டருக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தற் போது மீண்டும் திருவண்ணாமலையில் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.
    கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்டம் அண்மையில் அமலுக்கு வந்தது. பெண் உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்குள் தொடரப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், வாஷிங்டன் நகரில் வாடிகன் சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “கருக்கலைப்பு விவகாரம் ஒரு மதரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை” என்று கூறினார்.

    மேலும், பிரச்சினையை தீர்க்க மனித உயிரை பறிப்பது சட்டப்பூர்வமானதா? என்று கேள்வி எழுப்பிய அவர், கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று வேதனை தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், “கரு சரியாக வளரவில்லை என்பதால் கருக்கலைப்பு செய்வதை ஏற்கமுடியாது. அது மனிநேயமற்ற செயல். மிகவும் பலவீனமான முறையில் பிறந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை வரவேற்போம்” என்றார்.
    வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். #Pope #Popesaysabortion #hiringcontractkiller #contractkiller
    வாட்டிகன் சிட்டி:

    இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார்.

    வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு மனித உயிரிடம் இருந்து விடுபடுவது என்பது, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மற்றவரை ஆள்வைத்து கொல்வதைப் போன்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Pope #Popesaysabortion #hiringcontractkiller #contractkiller
    மதுரை அருகே 4-வதும் பெண் குழந்தை பிறக்கும் என்று கருதி கருக்கலைப்பு செய்து பலியான பெண்ணின் வயிற்றில் ஆண் சிசு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம், எழுமலை உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராமுத்தாய் (வயது 28). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ராமுத்தாய் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அங்குள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்தனர்.

    அப்போது ‘உங்கள் கருவில் இருப்பது பெண் சிசு’ தற்போது 7 மாதமாகி விட்டது’ என்று கூறியதாக தெரிகிறது.

    4-வதும் பெண் குழந்தையா? என கவலையடைந்த ராமுத்தாய் கர்ப்பத்தை கலைப்பது என்று முடிவெடுத்தார். அப்போது அதே பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்சு ஜோதி லட்சுமி அவருக்கு உதவ முன் வந்தார்.

    அதைத்தொடர்ந்து ராமுத்தாய்க்கு, ஜோதி லட்சுமி வீட்டில் கருக்கலைப்பு நடந்தது. இதில் ராமுத்தாய் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக ராமர் கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இறந்துபோன ராமுத்தாய் வயிற்றில் இருந்தது ஆண் சிசு என்பது தெரியவந்தது.

    இந்த தகவலை அறிந்த ராமுத்தாயின் கணவரும், அவரது குடும்பத்தினரும் கதறித்துடித்தனர்.

    எந்த குழந்தையாக இருந்தாலும் வளர்க்கலாம் என்று கூறினேன். என்னிடம் கேட்காமலேயே இப்படி முடிவெடுத்து விட்டாளே என்று ராமர் தனது வேதனையை தெரிவித்தார்.

    இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ மருதுபாண்டியனிடம் கேட்டபோது, ராமுத்தாயின் உடலை கூராய்வு செய்து பார்த்தபோது அவரின் வயிற்றில் ஆண் சிசு இருந்தது தெரியவந்தது. ராமுத்தாய் இறந்தநிலையில் குழந்தையும் வயிற்றிலேயே இறந்து விட்டது என்றார்.

    உசிலம்பட்டி தாலுகா போலீசாரின் விசாரணையில் ராமுத்தாயின் கருவில் சிசுவின் இனம் தொடர்பாக தனியார் ஸ்கேன் சென்டர் முன்கூட்டியே உறவினர்களிடம் தெரிவித்தது உறுதியானது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையத்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் ஸ்கேன் சென்டர்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.

    இதில் பெரும்பாலானவை அரசு அங்கீகாரம் பெறாதவை. தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு வாடிக்கையாளரிடம் பெரும் பணம் வசூலித்து கொண்டு தாயின் வயிற்றில் உள்ள சிசுவின் இனம் தொடர்பாக தகவல் கூறுகின்றனர்.

    எனவே மதுரை மாவட்ட மருத்துவ இயக்குநரகம் அதிரடி விசாரணை நடத்தி போலி ஸ்கேன் சென்டர்களை களையெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், வருகிற 11-ந்தேதி கரு கலைத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். #MadrasHighCourt
    சென்னை:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகள் 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். பிளஸ்-2 படித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது, அவர் தினமும் ஆட்டோவில் சென்று வந்தார். அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் சந்தோஷ்குமார், ஏற்கனவே திருமணமானவர். ஆனால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, என் மகளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

    இதை நம்பி, அவருடன் கடந்த மே மாதம் என் மகள் சென்று விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். போலீசார் என் மகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவர் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டார். என்னுடைய மகள் தற்போது காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். என் மகளுக்கு இன்னும் 17 வயது கூட ஆகவில்லை. அதனால், மைனர் பெண்ணான என் மகளது வயிற்றில் உள்ள கருவை கலைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

    என் மகளை, இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க திருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகியோர், சிறுமியின் கருவை கலைப்பது குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், சிறுமியின் உடல் நலம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ். சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார்.

    மருத்துவ அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை இன்றே கலைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு உடனே மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் வருகிற 11-ந்தேதி கரு கலைத்தது தொடர்பான அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். #MadrasHighCourt

    தண்டராம்பட்டு அருகே நாட்டு வைத்தியத்தில் கருக்கலைப்பு செய்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வைத்தியம் செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சத்யா (வயது 27), வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு இந்துமதி (8) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் கிராமத்திற்கு சென்று நாட்டு வைத்தியம் பார்க்கும் கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டியிடம் கருவை கலைக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து மூதாட்டி எருக்கன் குச்சி வைத்து கருவை கலைக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

    இதனால் சத்யாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சத்யாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்த உறவினர்கள், போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, சாத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கருக்கலைப்பு செய்த கன்னியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×