search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டு வைத்தியத்தில் கருக்கலைப்பு செய்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு - மூதாட்டி கைது
    X

    நாட்டு வைத்தியத்தில் கருக்கலைப்பு செய்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு - மூதாட்டி கைது

    தண்டராம்பட்டு அருகே நாட்டு வைத்தியத்தில் கருக்கலைப்பு செய்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வைத்தியம் செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சத்யா (வயது 27), வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு இந்துமதி (8) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் கிராமத்திற்கு சென்று நாட்டு வைத்தியம் பார்க்கும் கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டியிடம் கருவை கலைக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து மூதாட்டி எருக்கன் குச்சி வைத்து கருவை கலைக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

    இதனால் சத்யாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சத்யாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்த உறவினர்கள், போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, சாத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கருக்கலைப்பு செய்த கன்னியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×