search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Woman Arrested"

    • மதுரை அருகே கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த ராஜகுருவின் மனைவி ராஜலட்சுமி(வயது60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். 

    • 10 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ரகிமான்பேட்டையை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது வீட்டின் பின்புறம் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி 10 பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே சாராய விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில்சென்று சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது60 ) சாராயம் விற்பனை செய்துவருவதாக தொடர்ந்து புகார் வந்தது.அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது நாகம்மாள் விற்பனைக்கு வைத்து இருந்த சாராயம் கைப்பற்றப்பட்டு அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தண்டராம்பட்டு அருகே நாட்டு வைத்தியத்தில் கருக்கலைப்பு செய்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வைத்தியம் செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சத்யா (வயது 27), வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு இந்துமதி (8) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் கிராமத்திற்கு சென்று நாட்டு வைத்தியம் பார்க்கும் கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டியிடம் கருவை கலைக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து மூதாட்டி எருக்கன் குச்சி வைத்து கருவை கலைக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

    இதனால் சத்யாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சத்யாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்த உறவினர்கள், போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, சாத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கருக்கலைப்பு செய்த கன்னியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×