search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman arrested"

    • கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின.
    • உறவினர் வீட்டுக்கு வந்திருந்த வைசாலி அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மனைவி சரிதா. இவர்களது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் வீட்டுக்கு வந்து இருந்தனர். நேற்று இரவு அனைவரும் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாததால் சரிதா, உறவினர்கள் தில்லைநாயகி, மூதாட்டி ஜோதி, கவுதம் நிஷா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெளியே பாயை விரித்து தூங்கினர்.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.இன்று அதிகாலை 5 மணி அளவில் 10-வது தெருவுக்குள் கார் ஒன்று வந்தது. திடீரென அந்த கார் அதிவேகமாக வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்த சரிதா உள்ளிட்ட7 பேர் மீது ஏறியது. கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதில் 4 பேர் பெண்கள் ஆவர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது கார் நசுக்கியதால் 7 பேர் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கார் ஏறியதில் சரிதா, தில்லை நாயகி ஆகிய 2 பெண்களின் கால்களிலும் எலும்புகள் உடைந்துள்ளன. இதுபற்றி கேள்விப்பட்டதும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறுகலான சந்தில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைசாலி பாட்டீல் என்பது தெரிய வந்தது.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. கூகுள் மேப் காட்டிய வழியில் குறுகலான குடியிருப்பு பகுதியில் சந்து இருப்பது தெரியாமலேயே வைசாலி காரை ஓட்டிச் சென்று உள்ளார். அப்போது வீட்டு முன்பு தூங்கியவர்கள் மீது ஏற்றியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கூகுள் மேப்பை நம்பி சென்று முட்டுச்சந்தில் விபத்தை ஏற்படுத்திய வடமாநிலப் பெண் வைஷாலி பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார்.
    • மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை குருடம்பாளையம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா (வயது32).

    இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் நான் என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்த நிறுவனம் தொடங்கி உள்ளேன்.

    அதில் நீங்கள் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும், வருடத்தின் இறுதியில் முதலீடு செய்த ரூ.1 லட்சத்தையும் திரும்ப தந்து விடுவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    மேலும் புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால், 5 சதவீதம் வரை ஊக்கத் தொகை தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவரது நிறுவனத்தில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இவ்வாறாக அவர் பலரிடம் இருந்து ரூ.2 கோடி அளவுக்கு முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.

    முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

    இதனால் முதலீடு செய்தவர்கள் அவரை தொடர்பு கொண்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ஒரு சிலர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று தங்கள் பணத்தை கேட்டுள்ளனர்.

    அப்போது தன்னை மிரட்டுவதாக பணம் கேட்டு வந்தவர்கள் மீதே மதுமிதா போலீசில் புகார் அளித்தார். சில நாட்களில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. திடீரென தலைமறைவாகி விட்டார்.

    மதுமிதாவை, அவரிடம் முதலீடு செய்தவர்கள் தேடி வந்தனர். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் தவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசிலும் அவர்கள் புகார் அளித்தனர். போலீசார் மோசடி செய்த மதுமிதாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்தது. அங்கும் இது போன்று மோசடியில் ஈடுபட்டதும், அங்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதை அறிந்ததும், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தப்பி வர இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்தது.

    அவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த பாதிக்கப்பட்டவர்கள், மதுமிதாவிடம் பாதிக்கப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு நபரை கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று அந்த நபர், விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தார். மதுமிதா விமானத்தை விட்டு இறங்கி வந்ததும், அவரை நேரில் பார்த்த பாதிக்கப்பட்டவர், நான் உங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளேன். நான் உங்களை பத்திரமாக காரில் கொண்டு கோவையில் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    அதனை மதுமிதாவும் உண்மை என நம்பி காரில் ஏறினார். இதையடுத்து இரவில், அந்த நபர் காரில் மதுமிதாவை அழைத்து கொண்டு கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே மதுமிதாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் நின்றிருந்தனர்.

    அவர்கள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து, ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

    ஆனால் போலீசார் இது தொடர்பாக நீங்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுமிதாவுடன் கார்களிலேயே இரவு முழுவதும் போலீஸ் வளாகத்திலேயே இருந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மதுமிதா திடீரென காரில் இருந்து இறங்கி தப்பியோடினார்.

    இதனை பார்த்த, அவரிடம் முதலீடு செய்தவர்கள் மதுமிதாவை பிடிக்க முயன்றனர். அப்போது நீங்கள் என் அருகே வந்தால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் மதுமிதாவிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மதுமிதா தன்னுடன் பள்ளியில் படித்த தோழிகளின் பெற்றோர் மற்றும் தன்னுடன் படித்தவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதும், அவர் துபாய்க்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின்னரும், அங்கிருந்தபடியே ஆன்லைன் மூலமாக சிலரிடம் பங்கு வர்த்தகம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறியும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.

    இதுதவிர துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொள்ளும் மதுமிதா, அதன்பின்னர் அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும், அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்ததும், அங்கிருந்து தப்பி கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.

    இவர் இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையே மதுமிதா மீது கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மினிஜான் பிரதீப் புகார் அளித்தார். அதன்பேரில் மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பெண் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார்.

    இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.

    பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக பரிமளா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் பணப்பையை எடுத்துச்செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து பணப்பை குறித்து ஞாபகம் வந்ததும் சுதர்சன் உடனே வீட்டின் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தார்.

    அப்போது அதில் இருந்த பணப்பை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லூர் கல் பாலம் காளிதோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி யோகபிரியா (வயது 31) பணப்பையை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதி யில் அரசம்பட்டை சேர்ந்த அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அஞ்சலையை கைது செய்து, அவரிடமிருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • மதுரை மாட்டுத்தாவணியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை மாவட்ட, நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமூக விரோத கும்பல் கஞ்சா விற்று வருகிறது. இந்தநிலையில் மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளதுரை, போலீசார் அந்தப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் கட்டை பையுடன் சந்தேகத்திற்கி டமான வகையில் நின்றி ருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆனால் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஆந்திர மாநிலம் ராயபுரம் இந்தூர் காலனியை சேர்ந்த லோகேஷ்வர பிரசாத் மனைவி பத்ம சலபக்கா பத்மஸ்ரீ(வயது 32) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஏ.டி.எம்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி மதுரையில் சிலரிடம் விற்க வந்துள்ளார். அவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்? மதுரையில் உள்ள கூட்டாளிகள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை
    • கலெக்டர் உத்தரவு

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 45) என்பவர் கடந்த மாதம் 20-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து அழித்தனர்.

    இவர் ஏற்கனவே பலமுறை சாராய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் முருகேஷ், பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

    • போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் .
    • மறைவான பகுதியில் சாராயம் விற்றவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கடலூர்:

    குள்ளஞ்சாவடி போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் . அதில் சுப்ரமணியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார்மறைவான பகுதியில் சாராயம் விற்ற நடுத்தெருவை செர்ந்த சின்ராஜ் மனைவி சத்தியவாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
    • கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி மாலை மகளின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக மனைவியுடன் ரூ.2½லட்சம் ரொக்கத்துடன் மாநகர பஸ்சில் (12ஜி) தி.நகருக்கு சென்றார்.

    பஸ்சில் இருந்து இறங்கிய இருவரும் பிரபல கடையில் நகை வாங்கிவிட்டு பணத்தை செலுத்த பையை பார்த்தபோது ரூ.2½ லட்சம் மாயமாகி இருந்தது.

    மாநகர பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் பாரதிராஜா, சப் - இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான 2 பெண்கள் விஜயகுமார் பயணம் செய்த பஸ்சில் பயணம் செய்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர்கள் பரமக்குடியை சேர்ந்த உறவினர்களான கவிதா மற்றும் ரேகா என்பது தெரிந்தது. மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.

    இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ்சில் தனியாக பயணம் செய்பவர்களை குறி வைத்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.

    அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    • மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    புதுவை மாநி லத்தில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை கலால் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் ஒரு பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மகளிர் போலீசாரை வைத்து விசாரணை நடத்தி, அவரை சோதனையிட்டனர்.

    இதில் அவர் எடுத்த வந்த பையில் புதுவை மாநிலத்தில் வாங்கப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது. மேலும், பெண் அணிந்திருந்த ஆடைக்குள்ளும் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தார். விசார ணையில் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த மச்சக்காளி என்கிற நம்பிக்கைமேரி (வயது 48), என்பதும், புதுவை மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த உளுந்தூர்பேட்டை கலால் போலீசார், அவரிடமிருந்து 120 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் பறிமுதல் செய்தனர் .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் கிழக்கு மடத் தெருவில் வசித்து வருபவர் குமாரி (வயது 50). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப் மற்றும் போலீசார் முத்து, பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆலத்தூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குமாரியை கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் 5 எண்ணிக்கை கொண்டவை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து பின்பு சிறையில் அடைத்தனர்.

    ×