search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குண்டர் சட்டத்தில் கைது
    X

    பெண் குண்டர் சட்டத்தில் கைது

    • போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை
    • கலெக்டர் உத்தரவு

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 45) என்பவர் கடந்த மாதம் 20-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து அழித்தனர்.

    இவர் ஏற்கனவே பலமுறை சாராய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் முருகேஷ், பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    Next Story
    ×