search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் மேப்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
    • வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    காணும் பொங்கலையொட்டி மெரினாவில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    மெரினாவில் காணும் பொங்கல் அன்று காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை-முத்துசாமி பாயின்ட்-வாலாஜா பாயின்ட்-அண்ணாசாலை பெரியார் சிலை-அண்ணா சிலை-வெல்லிங்டன் பாயின்ட்-ஸ்பென்சர் சந்திப்பு-பட்டுளாஸ் சாலை-மணிக்கூண்டு-ஜி.ஆர்.எச். பாயின்ட் வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

    அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை. பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

    மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது. (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்).

    பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்து வரும் மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கிக்கிடக்கிறது. ஓசூர் பஸ் நிலையம் தொடங்கி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம், சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு திரும்பினார். அப்போது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றார்.

    செல்போனை பார்த்தபடியே காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி பகுதியை கடந்தார். ஆனால் மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது தெரியாமல் காரை அந்த தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார். இதனால் காரை வெள்ள நீர் சூழ்ந்தது.

    இதனால் காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    கூகுள் மேப் பார்த்து வாகனம் இயக்கும் பலர் இவ்வாறு அசம்பாவிதங்கள் சிக்குவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது.
    • மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கோட்டயம்:

    கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு ஊருக்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி டிரைவர் காரை ஓட்டி உள்ளார். கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது. டிரைவர் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கியது.

    காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சென்று 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • கூகுள் ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    • இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.

    கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் மேப் செயலியை வைத்து இருபிடத்தின் புகைப்படங்களை 360 டிகிரியில் தெளிவாக காண முடியும்.


    வெளிநாடுகளில் இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்ட போதும் இந்தியாவில் தற்போது தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.

    முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×