search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle accident"

    • மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.
    • இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடைய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையானது, இதுவரை செயல்பாட்டில் இருந்த கருணைத்திட்ட ம் 1989 - ஐ மாற்றி, அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2022' என்ற புதிய திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தால் இழப்பீடு பெறும் வழிமுறை வருமாறு:-

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர் அல்லது இறந்தவரின் உறவினர் முதலில் இழப்பீடு விசாரணை அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். (புதுச்சேரி- மாவட்ட துணை கலெக்டர், காரைக்கால்- காரைக்கால் டவுன் தாசில்தார்.)

    இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடை ய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து தீர்வை அதிகாரி 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடுக்கான ஆணையை ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண் டும். அதனை பெற்ற ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கவுன்சில் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஆந்திர மாநிலம், குப்பம் ஆர்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகன் நிதின் (வயது 30). இவர் நேற்று வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு இவருக்கு சொந்தமான காரில் வேலூர் நோக்கி சென்றார்.

    பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா ஓட்டல் எதிரே வந்த போது கார் பழுதடைந்துள்ளது. இதனால் அவர் காரை ஓட்டல் அருகில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைப்பதற்காக எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நிதின் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த நிதின் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • 3 மகன்கள் உள்ள நிலையில் பரிதாபம்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி மலர் இவர்களுக்கு கார்த்திக், சாரதி, கலைமுத்து என 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் பொன்னப்பன்தாங்கல் கன்னி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரன் மீது மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக சந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
    • முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    ெதன்னம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் அந்த வாலிபர்களை ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.

    இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் வாலிபர்களை பிடிப்பதற்காக அவர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று பின் பக்கத்தில் இடித்தார். அப்போது ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.

    மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர்கள் இருட்டில் ஓடி தப்பித்தனர். ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    போலீசார் வாலிபர்கள் விட்டுச் சென்ற கைப்பையை சோதனை செய்தனர். அதில் பட்டாகத்தி, வீடுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச் லைட், சிறிய கத்தி ஆகியவை இருந்தது. வாலிபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கணியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (72) என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தனர் என்று இதுவரை கண்டுபி டிக்கப்படவில்லை. போலீசார் கொலையாளிகளை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 9 பேர் படுகாயம்
    • போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியது.

    அப்போது 2 வாகனங்களையும் டிரைவர்கள் நிறுத்தி இறங்கி பார்த்து ெகாண்டிந்தனர். அப்போது திடீரென அதே வழியாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏற்கனவே விபத்துக்குள்ளாகி நின்றிருந்த மினிலாரி மற்றும் கார் மீதும் வேகமாக மோதியது.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் மணி கண்டன்(வயது 48) மினி லாரியில் பயணம் செய்த ராகுல் (18) யோகராஜ் (20) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்,

    அதேபோல் காரில் பயணம் செய்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவது பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி க்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி டிரைவர் உட்பட 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதுகுறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செய்யாறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த தனசேகரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 23). தொழிலாளி. இவரது மனைவி கவிதா. நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பருடன் பைக்கில் வேலை சம்பந்தமாக பெருங்கட்டூருக்கு சென்றார்.

    அங்குள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சுதாகர் காஞ்சிபுரம் - கலவை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுதாகர் பலத்த காயம் அடைந்தார்.

    இதனைக் கண்ட சுதாகரின் நண்பரும் அந்த வழியாக சென்றவர்களும் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பெருங்கட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    வடமதுரை:

    திருச்சியை சேர்ந்த பிலால்முகமது மகன் ராஜா (வயது25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் திருச்சியில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் லோடுமேன்களாக திருச்சியை சேர்ந்த சபீர்முகமது (20), திருவெறும்பூரை சேர்ந்த லோகநாதன் ஆகியோரும் வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி ரோடு மூணாண்டிபட்டி அருகே இன்று காலை வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும் உடல் நசுங்கி பலியானது. அப்போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன.
    • விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாநல்லூர்:

    ஊத்துக்குளி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையின் செங்கப்பள்ளி புறவழிச்சாலை தொடங்கும் பிரிவில் சாலையோர உணவகங்களில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து உணவகங்கள் செயல்படுகின்றன. அங்கு வரிசையாக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இங்கு விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி சென்னையை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் பலியானர்கள்.
    • நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம்:

    சென்னை எம்ஜிஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனும் (17) நண்பர்களாவர். கிருபாகரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர்களும், இவர்களது நண்பர்கள் 4 பேரும் 3 மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த அதிக வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஹரியும் கிருபாகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரி ஓட்டிச்சென்றார்.

    திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வந்த போது ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் ஹரி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்தார். இவரது பின்னால் அமர்ந்து வந்த பிளஸ்-2 மாணவன் கிருபாகரன் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்சில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் கிருபாகரன் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
    • சாலை நடுவே தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் காடாம்புலியூரில் இருந்து நெய்வேலி இந்திரா நகர் நோக்கி நெடுஞ்சாலை பணியாளர்கள் கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. காடாம்புலியூர் அடுத்த கீழக்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே அந்த வாகனம் வந்து கொண்டிருந்த போது குறுக்கே வந்தமோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    இதனால் நெடுஞ்சாலை பணியாளர் வந்த வாகனம் சாலை நடுவே தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர், குறுக்கே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை
    • சாலையை கடந்தபோது விபரீதம்

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி.

    இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 78) இவர் நேற்று வாணியம்பாடி கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. சம்பவம் இடத்திலேயே தலை நசுங்கி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் வாலூர் பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மகன் சின்னபையன் (வயது 55), விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக் கிளில் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னப் பையன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×