search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி வாலிபர் பலி
    X

    வாகனம் மோதி வாலிபர் பலி

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஆந்திர மாநிலம், குப்பம் ஆர்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகன் நிதின் (வயது 30). இவர் நேற்று வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு இவருக்கு சொந்தமான காரில் வேலூர் நோக்கி சென்றார்.

    பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா ஓட்டல் எதிரே வந்த போது கார் பழுதடைந்துள்ளது. இதனால் அவர் காரை ஓட்டல் அருகில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைப்பதற்காக எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நிதின் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த நிதின் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×