search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கப்பள்ளியில் வாகன விபத்தை தடுக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்

    செங்கப்பள்ளியில் வாகன விபத்தை தடுக்க கோரிக்கை

    • கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன.
    • விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாநல்லூர்:

    ஊத்துக்குளி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையின் செங்கப்பள்ளி புறவழிச்சாலை தொடங்கும் பிரிவில் சாலையோர உணவகங்களில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து உணவகங்கள் செயல்படுகின்றன. அங்கு வரிசையாக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இங்கு விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×