search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் விபத்து"

    • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    வடமதுரை:

    திருச்சியை சேர்ந்த பிலால்முகமது மகன் ராஜா (வயது25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் திருச்சியில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் லோடுமேன்களாக திருச்சியை சேர்ந்த சபீர்முகமது (20), திருவெறும்பூரை சேர்ந்த லோகநாதன் ஆகியோரும் வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி ரோடு மூணாண்டிபட்டி அருகே இன்று காலை வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும் உடல் நசுங்கி பலியானது. அப்போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
    • விபத்து குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்(28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது திண்டுக்கல் திரும்பினார். இவரது நண்பர் செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர்(41). இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டீசல் நிரப்பிக்கொண்டு அரசு பஸ் வெளியே வந்தது. அப்போது பைக்கில் வந்தவர்கள் அதனை கவனிக்காமல் சென்றதால் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.

    ராஜேஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலசந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிதுநேரத்திலேயே பாலசந்தரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் மகுடீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்த்(48). பால்வியாபாரி. இவர் கொசவபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
    • பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் அருகே உள்ள சத்திரப்பட்டி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.

    நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ரெங்கராஜன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெங்கராஜன் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் ஆபத்தான முறையில் பாத யாத்திரை செல்கின்றனர். போலீசார் இது போன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
    • பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    செம்பட்டி:

    சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ், சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கம்பம் அனுமந்தபட்டியைச் சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல், வத்தலகுண்டுவில் இருந்து லாரியில் செங்கல்களை ஏற்றி கொண்டு, தென்காசி அருகே இடைகால் பகுதியை சேர்ந்த டிரைவர் மாடசாமி (47) என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி டிரைவர் மாடசாமி படுகாயமடைந்தார். சுமார் 1 மணநேரத்திற்கும் மேலாக போராடி அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பஸ்சில் பயணம் செய்த தேனி, பெரியகுளம், கம்பம் பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் மணி, சிவக்குமார், ரபீக், கிறிஸ்டோபர், சண்முகவள்ளி, சுரேந்திரன், பரமசிவன், முத்துமணி உள்பட 10 பேர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சொக்கலிங்கபுரம், சித்தையன்கோட்டை வழியாக மாற்றுவழியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

    ×