search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி மூதாட்டி பலி
    X

    வாகனம் மோதி மூதாட்டி பலி

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை
    • சாலையை கடந்தபோது விபரீதம்

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி.

    இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 78) இவர் நேற்று வாணியம்பாடி கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. சம்பவம் இடத்திலேயே தலை நசுங்கி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×