search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Transport"

    • மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.
    • இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடைய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையானது, இதுவரை செயல்பாட்டில் இருந்த கருணைத்திட்ட ம் 1989 - ஐ மாற்றி, அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2022' என்ற புதிய திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தால் இழப்பீடு பெறும் வழிமுறை வருமாறு:-

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர் அல்லது இறந்தவரின் உறவினர் முதலில் இழப்பீடு விசாரணை அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். (புதுச்சேரி- மாவட்ட துணை கலெக்டர், காரைக்கால்- காரைக்கால் டவுன் தாசில்தார்.)

    இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடை ய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து தீர்வை அதிகாரி 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடுக்கான ஆணையை ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண் டும். அதனை பெற்ற ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கவுன்சில் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    கடலூர்:

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டலம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மண்டலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளிலிருந்து உரிய படிவங்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறதாததால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவிப் பொறியாளர் (இயக்கம்) பரிமளம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் போட்டோ ஓட்டி விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது.
    • எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    சென்னை:

    அடையாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, போக்குவரத்துத்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது. இதை சீரமைக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் முதலமைச்சர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பை அமைச்சர் சிவசங்கர் எனக்கு வழங்கியுள்ளார்.

    முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பணியாளர்களின் சம்பள விகிதம் சீர்குலைக்கப்பட்டது. இது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பே-மெட்ரிக்ஸ் முறையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பணிபுரிந்த 6 ஆயிரத்து 281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்டவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 3 ஆயிரத்து 414 பேருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.

    இதன் அடையாளமாக 612 பேருக்கு இன்று ரூ.171 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறதோ அதுபோல போக்குவரத்துத்துறை மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் சிக்கல்களை சரிசெய்யும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு கண்டு வருகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற நமது திட்டத்தை கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • மகளிருக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப்பொறுப் பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளும் விதமாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பேருந்துகளில் உள்ள மகளிரிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், மகளிர் அனைவரும் தினமும் பஸ்களில் பயணம் செய்யும்போது நடத்துநர்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா? எனவும், நடத்துநர்கள் தங்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்கிறார்களா? என கேட்டறிந்தார்.

    மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 244 சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1.38 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 65.97 சதவீதம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுநாள்வரை 4.72 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்டதுடன், பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை மத்திய புதுப்பிக்கும் தொழிற்கூடம், டயர் பிரிவு மற்றும் தகுதி சான்று பிரிவுகளில் ஆய்வு செய்ததுடன், உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார். 

    மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் பஸ்களை சரியானநேரத்தில் இயக்கவேண்டும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள தவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும், அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிடவும் அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.மு.கோபால் அறிவுறுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) லிட்., மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை
    • 131 வாகனங்கள் ேசாதனை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.

    இந்த ஆய்வின் போது போக்குவரத்து துறையின் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் எம்.எஸ்.இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.செந்தில்வேலன், குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குடியாத்தம் கே.கருணாநிதி, வேலூர் எஸ்.சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பரதராமி, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 131 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

    ×