search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிருக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்: போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல்
    X

    விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால் பஸ்சில் ஏறி பயணிகளிடம் பயணம் குறித்து கேட்டறிந்தார்.

    மகளிருக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்: போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல்

    • மகளிருக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப்பொறுப் பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளும் விதமாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பேருந்துகளில் உள்ள மகளிரிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், மகளிர் அனைவரும் தினமும் பஸ்களில் பயணம் செய்யும்போது நடத்துநர்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா? எனவும், நடத்துநர்கள் தங்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்கிறார்களா? என கேட்டறிந்தார்.

    மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 244 சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1.38 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 65.97 சதவீதம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுநாள்வரை 4.72 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்டதுடன், பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை மத்திய புதுப்பிக்கும் தொழிற்கூடம், டயர் பிரிவு மற்றும் தகுதி சான்று பிரிவுகளில் ஆய்வு செய்ததுடன், உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார்.

    மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் பஸ்களை சரியானநேரத்தில் இயக்கவேண்டும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள தவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும், அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிடவும் அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.மு.கோபால் அறிவுறுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) லிட்., மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×