search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tim Southee"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • சவுதி- வில்லியம்சன் ஆகியோர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.

    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர்களான டிம் சவுத்தி மற்றும் கனே வில்லியம்சன் ஆகியோர் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு சவுதி மற்றும் வில்லியம்சன் மைதானத்திற்குள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். மேலும் மைதானத்தில் அந்நாட்டு தேதிய கீதம் பாடும் போது அவர்களது குழந்தைகளுடன் நின்று மரியாதை செலுத்தினர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

    இந்நிலையில் இவர்கள் இருவரும் 2008-ம் ஆண்டு நடந்து U19 உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். அரையிறுதி வரை நியூசிலாந்து முன்னேறியது. அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

    u19 உலகக் கோப்பைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நியூசிலாந்து சீனியர் அணியில் சவுதி அறிமுகமாகினார். இதில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியன் மூலம் ஒரு ஆண்டுக்குள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

    ஆனால் வில்லியம்சன் டெஸ்ட் அணியில் இடம் பெற கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. அவர் 2010-ம் ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரது பேட்டிங் திறமையால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறிது காலத்திலேயே அறிமுகமானார்.

    100 டெஸ்ட் போட்டிகளிலு விளையாடியுள்ள வில்லியம்சன் 8692 ரன்களை எடுத்துள்ளார், அவர் 32 சதங்களும் 33 அரை சதங்களும் அடித்துள்ளார். இவரை தவிர வேறு எந்த ஒரு நியூசிலாந்து வீரரும் இத்தனை சதங்களை கடந்ததில்லை. 100-வது டெஸ்ட்டில் விளையாடும் சவுதி, 378 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • டி20 வரலாற்றில் 150 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் சவுத்தி.
    • அவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் உள்ளார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் அதிரடியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுத்தி. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானிம் ரஷித் கான் 130 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி 127 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் லசித் மலிங்கா 107 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சஹல் 96 விக்கெட்டுடன் 14-வது இடத்தில் உள்ளார்.

    • நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • டெஸ்ட் போட்டிகளில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

    டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், கேப்டன் டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் பேட்டிங் சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார். ஸ்டுவார்ட் பிராட் வீசிய பந்தில் சிக்சர் அடித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டோனியுடன் 12வது இடத்தை பகிர்ந்துள்ளார். டோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்சர் அடித்திருந்தார். சவுத்தி 131வது இன்னிங்சில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை.
    • இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய கேப்டனாக சவுதி பொறுப்பேற்கிறார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சவுதி, 22 முறை டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இந்தமாதம் பாகிஸ்தானுக்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது சவுதி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அவர் நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாவார்.

    கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேன் வில்லியம்சன் கூறும்போது, அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச நிலையாகும். டெஸ்டில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வில்லியம்சன் 2016 இல் பிரெண்டன் மெக்கல்லத்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து 38 போட்டிகளின் நியூசிலாந்து (22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி) டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லீக் போட்டிகளில் அதிக பணம் கிடைப்பதால் வீரர்கள் அதில் விளையாட ஆர்வம்.
    • டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம்

    ஐ.பி.எல். உள்பட பல டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் பிரபலம் அடைந்துள்ளன. இதில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் இதுபோன்ற தொடர்களில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் நினைத்ததுபோல் லீக் போட்டிகளில் விளையாட முடியாது. மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, கிரிக்கெட் வாரியம் என்.ஓ.சி. அளித்தால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது.

    தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருநது டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷம் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

    மார்ட்டின் கப்தில் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியிடம் கேட்கப்பட்ட போது, கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியது என்பது சுவாரஸ்யமானது. நான் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளேன். இந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறேன். வருகிற வருடத்தில் எவ்வாறு நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது.

    உண்மையா சொல்லப்போனால், நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து நான் யோசிக்கவில்லை. வருடம் மாதங்களில் போதுமான அளவிற்கு போட்டிகள் உள்ளன. ஆனால், அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் நிலைத்து நின்று கிரிக்கெட் சூழல் மாறுவது குறித்து யோசிக்க முயற்சிக்க வேண்டும்.'' என்றார்.

    • நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
    • ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

    மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார். 


    இந்நிலையில் சூரிய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

    அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது இறுதி ஓவரை வீசிய டிம் சவுத்தி, அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து 176 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. #NZvSL
    இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து திணறியது. 64 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்தில் 68 ரன் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

    இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.



    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியும் திணறியது. பேட்டிங்கில் ஜொலித்த டிம் சவுத்தி பந்து வீச்சிலும் அசத்தினார். குணதிலகா (8), கருணாரத்னே (7), சண்டிமல் (6) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது இலங்கை.



    மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 27 ரன்னுடனும், சில்வா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் விவகாரத்தில் பேட்டியளித்த டிம் சவுத்திக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. #IPL2018
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி வில்லியர்ஸ் (69), மொயீன் அலி (65) கொலின் டி கிராண்ட்ஹோம் (40), சர்பராஸ் கான் (22) ஆகியோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி வந்தது. ஆனால், டிம் சவுத்தி, முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்தில் 62 ரன்களும் சேர்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதாராபத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 3-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார். பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்த டிம் சவுத்தி வேகமாக ஓடிவந்து டைவ் அடித்து பந்தை பிடித்தார். பந்து கையில் இருந்து தரையில் பட்டதாக தெரியவில்லை. டிவி நடுவரின் ரீப்ளே-யில் பந்து கீழே பட்டதாக தெளிவாக தெரியவில்லை. ஆனால், நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் டிம் சவுத்தி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் மிகவும் அப்செட் ஆனார்கள்.



    பின்னர் அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்த பின்னர் டிம் சவுத்தி டிவிக்கு பேட்டியளிக்கையில் கேட்ச் குறி்த்து பேசினார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக டிம் சவுத்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை டிம் சவுத்தி ஒத்துக் கொண்டார். இது லெவல்-1 வரைமுறைக்குள் வருவதால் கண்டனத்துடன் டிம் சவுத்தி அபராதம் இல்லாமல் தப்பினார். ஆனால், டிம் சவுத்தி மீதான நடவடிக்கை எடுக்க என் காரணம் என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
    ×