search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvSRH"

    • முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது.
    • பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது. 287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்தது. பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் வரை எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி அணி பந்து வீச்சாளர்கள் மோசமான சாதனையை படைத்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 4 பவுலர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

    பெங்களூரு அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் டாப்லே (68 ரன்), யாஷ் தயாள் (51 ரன்), பெர்குசன் (52 ரன்), விஜய்குமார் வைசாக் (64 ரன்) ஆகியோர் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளனர். 

    • வெற்றிக்காக போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சன்ரைசர்ஸ் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டும் ரீஸ் டாப்லே 1 விக்கெட்டும் விழ்த்தினார்.

    இதனையடுத்து கடினமான இலக்குடன் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது. 20 பந்தில் 42 ரன்கள் குவித்து விராட் கோலி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வில் ஜேக் 7, பட்டிதார் 9, சவுரவ் சவுகான் 0, என வெளியேறினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 28 பந்துகள் சந்தித்து 62 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார். வெற்றிக்காக போராடிய அவர் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறந்த ஒருநாள் வீரராக உருவாக உதவும் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #IPL2018 #RCBvSRH
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி வில்லியர்ஸ் (69), மொயீன் அலி (65) கொலின் டி கிராண்ட்ஹோம் (40), சர்பராஸ் கான் (22) ஆகியோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி வந்தது. ஆனால், டிம் சவுத்தி, முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்தில் 62 ரன்களும் சேர்த்தனர்.



    மொயீன் அலி 65 ரன்களை 34 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் குவித்தார். ஆஷஸ் தொடரில் மோசமாக விளையாடியதன் காரணமாக மொயீன் அலி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முக்கியமான ஆட்டத்தில் 65 ரன்கள் குவித்த மொயீன் அலி, ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒருநாள் நாள் போட்டியில் சிறந்த வீரராக உருவாக உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆர்சிபிக்கும், இங்கிலாந்து அணிக்கும் வருங்காலத்தில் விளையாடுவேன். இந்த ஐபிஎல் போட்டியில் விளயைாடுவது உண்மையிலேயே சிறந்த ஒருநாள் போட்டி வீரராக உருவாக உதவும். மேலும் என்னுடைய ஆட்ட முன்னேற்றத்திற்கு உதவும்’’ என்றார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் விவகாரத்தில் பேட்டியளித்த டிம் சவுத்திக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. #IPL2018
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி வில்லியர்ஸ் (69), மொயீன் அலி (65) கொலின் டி கிராண்ட்ஹோம் (40), சர்பராஸ் கான் (22) ஆகியோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி வந்தது. ஆனால், டிம் சவுத்தி, முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்தில் 62 ரன்களும் சேர்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதாராபத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 3-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார். பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்த டிம் சவுத்தி வேகமாக ஓடிவந்து டைவ் அடித்து பந்தை பிடித்தார். பந்து கையில் இருந்து தரையில் பட்டதாக தெரியவில்லை. டிவி நடுவரின் ரீப்ளே-யில் பந்து கீழே பட்டதாக தெளிவாக தெரியவில்லை. ஆனால், நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் டிம் சவுத்தி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் மிகவும் அப்செட் ஆனார்கள்.



    பின்னர் அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்த பின்னர் டிம் சவுத்தி டிவிக்கு பேட்டியளிக்கையில் கேட்ச் குறி்த்து பேசினார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக டிம் சவுத்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை டிம் சவுத்தி ஒத்துக் கொண்டார். இது லெவல்-1 வரைமுறைக்குள் வருவதால் கண்டனத்துடன் டிம் சவுத்தி அபராதம் இல்லாமல் தப்பினார். ஆனால், டிம் சவுத்தி மீதான நடவடிக்கை எடுக்க என் காரணம் என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
    டி வில்லியர்ஸ், மொயீன் அலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RCBvSRH
    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விராட் கொலி அவுட்டாகும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4.5 ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ரன்ரேட் சராசரியாக 10-ஐ தொட்டது. 12-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 25 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் 13-வது ஓவரில் 18 ரன்களும், 14-வது ஓவரில் 14 ரன்களும் குவித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது.

    இன்னும் 6 ஓவர் இருந்ததால் ஸ்கோர் 225 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவர் ராயல் சேலஞ்சர்ஸ்க்கு பேரிடியாக அமைந்தது. 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.



    டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். இருவரும் ஆட்டமிழக்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
    ×