search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீக் போட்டி"

    • மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின.
    • நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின.

    திருப்பூர்:

    பின்னலாடை நிறுவன அணிகள் மோதும் என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் லீக் போட்டிகள் நடைபெற்றன.

    ஜூபிட்டர் நிட்டிங் கம்பெனி - அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய ஜூபிட்டர் 15 ஓவரில் 6 விக்கெட் இழந்து 81 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அமேசிங் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்னுடன் தோல்வியடைந்தது. 3 ஓவர் பந்து வீசி 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜூபிட்டர் வீரர் செமிகுமார் ஆட்டநாயகனாக தேர்வானார்.

    மற்றொரு போட்டியில் ஸ்ரீவாரி கிளாத்திங் - வார்ஷா இன்டர் நேஷனல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீவாரி 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் குவித்தது.அடுத்து களமிறங்கிய வார்ஷா 13.5 ஓவரில் 48 ரன்னில் ஆட்டமிழந்தது. 3 ஓவர் பந்து வீசி 7 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஸ்ரீ வாரி வீரர் பிரபு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 144 ரன் எடுத்தது.தொடர்ந்து ஆடிய தங்கமன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்னில் சுருண்டது. தான் எதிர்கொண்ட 28 பந்துக்கு 60 ரன் விளாசிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் வீரர் லிபின் ஜோசப் ஆட்டநாயகனாக தேர்வானார்.

    நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டாலர் அணி, 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. அசால்டாக ஆடிய சி.ஆர்., டைகர் 8.2 ஓவரில் 62 ரன்னுடன் வெற்றிபெற்றது. 3 ஓவர் பந்து வீசி 3பேரை வீழ்த்திய சி.ஆர்., வீரர் சங்கரநாராயணன் ஆட்டநாயகனாக தேர்வானார்.அடுத்த சுற்று லீக் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    • லீக் போட்டிகளில் அதிக பணம் கிடைப்பதால் வீரர்கள் அதில் விளையாட ஆர்வம்.
    • டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம்

    ஐ.பி.எல். உள்பட பல டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் பிரபலம் அடைந்துள்ளன. இதில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் இதுபோன்ற தொடர்களில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் நினைத்ததுபோல் லீக் போட்டிகளில் விளையாட முடியாது. மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, கிரிக்கெட் வாரியம் என்.ஓ.சி. அளித்தால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது.

    தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருநது டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷம் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

    மார்ட்டின் கப்தில் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியிடம் கேட்கப்பட்ட போது, கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியது என்பது சுவாரஸ்யமானது. நான் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளேன். இந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறேன். வருகிற வருடத்தில் எவ்வாறு நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது.

    உண்மையா சொல்லப்போனால், நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து நான் யோசிக்கவில்லை. வருடம் மாதங்களில் போதுமான அளவிற்கு போட்டிகள் உள்ளன. ஆனால், அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் நிலைத்து நின்று கிரிக்கெட் சூழல் மாறுவது குறித்து யோசிக்க முயற்சிக்க வேண்டும்.'' என்றார்.

    ×