search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். போன்ற லீக் போட்டிகளால் கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது: டிம் சவுதி
    X

    ஐ.பி.எல். போன்ற லீக் போட்டிகளால் கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது: டிம் சவுதி

    • லீக் போட்டிகளில் அதிக பணம் கிடைப்பதால் வீரர்கள் அதில் விளையாட ஆர்வம்.
    • டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றம்

    ஐ.பி.எல். உள்பட பல டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் பிரபலம் அடைந்துள்ளன. இதில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் இதுபோன்ற தொடர்களில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் நினைத்ததுபோல் லீக் போட்டிகளில் விளையாட முடியாது. மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, கிரிக்கெட் வாரியம் என்.ஓ.சி. அளித்தால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது.

    தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருநது டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷம் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

    மார்ட்டின் கப்தில் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியிடம் கேட்கப்பட்ட போது, கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியது என்பது சுவாரஸ்யமானது. நான் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளேன். இந்த வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறேன். வருகிற வருடத்தில் எவ்வாறு நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது.

    உண்மையா சொல்லப்போனால், நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து நான் யோசிக்கவில்லை. வருடம் மாதங்களில் போதுமான அளவிற்கு போட்டிகள் உள்ளன. ஆனால், அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் நிலைத்து நின்று கிரிக்கெட் சூழல் மாறுவது குறித்து யோசிக்க முயற்சிக்க வேண்டும்.'' என்றார்.

    Next Story
    ×