search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து பாகிஸ்தான் தொடர்"

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • 4 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி, மேட் ஹென்ரி, பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவடில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக இப்திகார் அகமதுவும், தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் பின் ஆலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • ஒரு ரன்னை எடுக்க சென்ற ரிஸ்வான் பேட்டை தவற விட்டு கை விரல்களால் கீரிஸ் கோட்டை தொட்டார்.

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறது.

    முன்னதாக இத்தொடரின் 3-வது போட்டியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது தடுமாறி கையிலிருந்த பேட்டை தவற விட்டு பேட்டை எடுக்காமலேயே ரன் எடுக்க ஓடினார். இதனால் எதிர்ப்புறம் இருந்த கிரீஸ் கோட்டை தன்னுடைய கைவிரல்களால் தொட்ட 2 ரன்களை எடுத்தார். கை விரல்களால் கீரிஸ் கோட்டை ரிஸ்வான் தொட முயற்சித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அதை பார்த்த இந்திய வீரர் ஷிகர் தவான் "கபடி கபடி கபடி" என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு ரிஸ்வானை கலாய்த்துள்ளார். இந்த பார்த்த ரசிகர்களும் அவர்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மிட்செல் 72 ரன்னிலும் பில்ப்ஸ் 70 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் 3 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ரிஸ்வான் களமிறங்கினர். சைம் அயூப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பாபர் அசாம்- ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை மில்னே பிரிந்தார். பாபர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 20 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ஆலன் 8, டிம் சீஃபர்ட் 0, வில் யங் 4 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இந்த நிலையில் மிட்செல் - பில்ப்ஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து தடுத்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச அளவில் தொடர்ச்சியாக 8 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடைசி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து நடந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. அதனையடுத்து நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக 4 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
    • இந்த 3 போட்டிகளிலும் பாபர் அசாம் அரை சதம் விளாசி உள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பின் ஆலன் 5 பவுண்டரி 16 சிக்சருடன் 137 (62) ரன்கள் விளாசினார்.

    அதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் களமிறங்கிய வீரர்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். வெற்றிக்காக போராடிய பாபர் அசாம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகள் முறையே பாபர் அசாம் 66, 57, 58 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் தோல்வியை சந்தித்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சோகமான சாதனையையும் பாபர் அசாம் படைத்துள்ளார்.

    மேலும் ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 அரை சதங்கள் அடித்துள்ளார். அதுபோல பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிராக 8 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

    இதை தவிர அயல்நாட்டு மண்ணில் 23 அரைசதங்கள் விளாசிய ரோகித், விராட் கோலி சாதனையை பாபர் அசாம் முறியடித்தார். அவர் 24 அரை சதம் விளாசியுள்ளார்.

    • முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
    • பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது.

    டுனிடின்:

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 137 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடங்கும்.

    16 சிக்சர்கள் விளாசியதன் மூலம் பின்ஆலன் புதிய சாதனை புரிந்தார். அவர் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசரத்துல்லாவை சமன் செய்தார். ஹசரத்துல்லா 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக டேராடூன் மைதானத்தில் 16 சிக்சர்கள் அடித்து இருந்தார். தற்போது இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

    மேலும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் பின்ஆலன் படைத்தார். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரராக மெக்கல்லம் திகழ்ந்தார். அவர் 2012-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக பல்லேகலேவில் 123 ரன் எடுத்து இருந்தார்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 4-வது 20 ஒவர் போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
    • பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஹாமில்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பின் ஆலன் 74 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் பாபர் அசாம் - பகார் ஜமான் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பாபர் ஆசம் 66 ரன்களிலும், பகார் ஜமான் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இருவரும் அவுட்டானதும் பாகிஸ்தான் அணியின் நிலைமை தலைகீழ் ஆனது. மற்ற வீரர்கள் அனைவரும் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

    • டி20 வரலாற்றில் 150 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் சவுத்தி.
    • அவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் உள்ளார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் அதிரடியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுத்தி. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானிம் ரஷித் கான் 130 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி 127 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் லசித் மலிங்கா 107 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சஹல் 96 விக்கெட்டுடன் 14-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 226 ரன்களைக் குவித்தது.
    • டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.

    ஆக்லாந்து:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். கேன் வில்லியம்சன் 57 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.

    227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது.

    இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    • முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.
    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீபுல்லா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் டி20 தொடருக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    • 100-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 1 ரன்களை மட்டும் எடுத்தார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

    விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த 4 வீரர்களாக அறியப்பட்ட நிலையில், அவர்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் இணைந்துவிட்டார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி ரன்களை குவிப்பதுடன், சாதனைகளையும் படைத்துவருகிறார்.

    பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3696 ரன்களையும், 100 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5089 ரன்களையும், 104 டி20 போட்டிகளில் ஆடி 3485 ரன்களையும் குவித்துள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவந்த நிலையில், பாபர் அசாம், கோலியின் சாதனைகளையும் சேர்த்து முறியடித்து வருகிறார். அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் அணி 4-1 என ஒருநாள் தொடரை வெல்ல உதவினார்.

    முதல் 4 போட்டிகளில் நன்றாக ஆடிய பாபர் அசாம், தனது 100-வது ஒருநாள் போட்டியாக அந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டியை ஆடிய பாபர் அசாம், அந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். ஆனால் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிகமான ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

    100 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களுடன் 59.17 என்ற சராசரியுடன் 5089 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் முதல் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2-ம் இடத்தில் ஹாஷிம் ஆம்லா (4808) மற்றும் 3-ம் இடத்தில் ஷிகர் தவான்(4309) ஆகிய இருவரும் உள்ளனர்.

    ×