search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NzvsPAK"

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மிட்செல் 72 ரன்னிலும் பில்ப்ஸ் 70 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் 3 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ரிஸ்வான் களமிறங்கினர். சைம் அயூப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பாபர் அசாம்- ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை மில்னே பிரிந்தார். பாபர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 20 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ஆலன் 8, டிம் சீஃபர்ட் 0, வில் யங் 4 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இந்த நிலையில் மிட்செல் - பில்ப்ஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து தடுத்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச அளவில் தொடர்ச்சியாக 8 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடைசி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து நடந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. அதனையடுத்து நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக 4 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.

    • ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கொண்ட வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் அடித்தனர். கேன் வில்லியம்சம் 95 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மென் முறையே 29 மற்றும் 39 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. இதை அடுத்து 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பாகிஸ்தான் துரத்தியது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்த நிலையில், மழை குறிக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், டி.எல்.எஸ். விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ×