என் மலர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து பாகிஸ்தான் தொடர்"
- பாகிஸ்தானுக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணிக்கு ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- போட்டி முடிவடைந்த பிறகு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
- அப்போது ஒரு ரசிகருக்கும் குர்ஷில் ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியது.
அதன்பின் ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
போட்டி முடிவடைந்த பின்னர் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பவுண்டரி லைன் அருகே ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் வீரர் குர்ஷ்தில் ஷா, ஒரு ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக தெரிகிறது.
உடனடியாக பாதுகாவலர்கள் குர்ஷ்தில் ஷாவையும், ரசிகரையும் தனித்தனியாக இழுத்துச் சென்றனர். குர்ஷ்தில் ஷாவை பாதுகாப்பாக மைதானத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதேவேளையில் ரசிகரை மைதானத்தில் வெளியேற்றினர். இதனால் கொஞ்ச நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக பிரேஸ்வெல் 59, ரைஸ் மாரியூ 58 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அகிஃப் ஜாவெத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் இமாம் காயமடைந்தார். ஒரு ரன் எடுக்க ஓடும் போது பீல்டர் கீப்பரிடம் வீசிய பந்து அவரது ஹெட்மெட்டுக்குள் புகுந்ததில் அவர் காயமடைந்தார். இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அப்துல்லா ஷஃபீக்- பாபர் அசாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபீக் 33 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அரை சதம் அடித்த (50) கையொடு பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 221 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.
முன்னதாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மார்க் சாப்மேன் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் 2-வது போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரிஸ்வான் 27 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்த போட்டியிலும் நியூசிலாந்து அனி எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இறுதியில் பாகிஸ்தான் அணி 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் 27 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்களின் பிரபல நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ வீடியோ வெளியிட்டு கலாய்த்துள்ளார்.
அந்த வீடியோவிற்கு பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்வானின் நடனமாடும் வீடியோ என தலைப்பிட்டுள்ளார்.அவர் கூறுவது போல ரிஸ்வான் பேட்டிங் செய்தவதற்கு பதிலாக டான்ஸ் தான் ஆடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்றே சொல்லலாம். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியது.
அதனையடுத்து அவர் களநடுவராக வந்தாலே இந்தியா தோல்வியை சந்திக்கும் என்ற அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு நடுவர் ரிச்சர்ட் வந்தும் இந்தியா வெற்றி பெற ஆரம்பித்து விட்டதால் அவர் குறித்து செய்திகள் வருவது குறைந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மிட்செல் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் நசீம் ஷா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
ஃபஹீம் அஷ்ரஃப் 73 ரன்னிலும் நசீம் ஷா 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது.
இருவரும் அரை சதம் கடந்தனர். டேரில் மிட்செல் 76 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மேன் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.
அடுத்து வந்த அப்பாஸ் அரை சதம் அசத்தினார். அடுத்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் 344 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- உஸ்மான் கான் களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்தது. 39 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மானும் 36 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து பாபர் அசாம் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான பாபர் அசாம் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 78 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சல்மான் ஆகா 58 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.
- நீஷம் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
- செய்ஃபர்ட் 38 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசினார்.
பாகிஸ்தான் அணி ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது போட்டியில் மட்டும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது.
நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சல்மான் ஆகா தாக்குப்பிடித்து 39 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதாப் கான் 28 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 11 ரன் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் நீஷம் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டும், பென் சியர்ஸ் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட் அபாரமாக விளையாடினார் மறுமுனையில் பின் ஆலன் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சாப்மேன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். செய்ஃபர்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 97 ரன்கள் விளாச நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபர்ட் 6 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியுள்ளது. நீஷம் ஆட்டநாயகன் விருதம், டிம் செய்ஃபர்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.
மவுண்ட் மனுவா:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- பாகிஸ்தான் தொடக்க ஜோடி 5.5 ஓவரில் 74 ரன்கள் விளாசியது.
- ஹசன் நவாஸ் 45 பந்தில் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்க் சாப்மேன் 44 பந்தில் 94 ரன்கள் விளாச நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்தை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.

பாகிஸ்தான் 5.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது ஹாரிஸ் 20 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். அடுத்து கேப்டன் சல்மான் ஆகா களம் இறங்கினார். பாகிஸ்தான் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.
ஹசன் நவாஸ், சல்மான் ஆகா ஜோடியும் அற்புதமாக விளையாடியது. 8.1 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைக் கடந்தது. ஹசன் நவாஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் 12.2 ஓவரில் 150 ரன்னையும், 15.5 ஓவரில் 200 ரன்னையும் கடந்தது. இதற்கிடையே சல்மான் ஆகா 30 பந்தில் அரைசதம் விளாசினார்.
15 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஹசன் நவாஸ் சதம் அடித்தார். 44 பந்தில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹசன் நவாஸ் 45 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தும், சல்மான் ஆகா 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் (4 ஓவர்) 54 ரன்களும், பென் சியர்ஸ் (4 ஓவர்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஜேக்கப் டஃபி 3 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பிரேஸ்வெல் 2 ஓவரில் 23 ரன்களும், இஷ் சோதி 2 ஓவில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
- அப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.
முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீசம், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.