என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khushdil Shah"

    • போட்டி முடிவடைந்த பிறகு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
    • அப்போது ஒரு ரசிகருக்கும் குர்ஷில் ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    போட்டி முடிவடைந்த பின்னர் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பவுண்டரி லைன் அருகே ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் வீரர் குர்ஷ்தில் ஷா, ஒரு ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக தெரிகிறது.

    உடனடியாக பாதுகாவலர்கள் குர்ஷ்தில் ஷாவையும், ரசிகரையும் தனித்தனியாக இழுத்துச் சென்றனர். குர்ஷ்தில் ஷாவை பாதுகாப்பாக மைதானத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதேவேளையில் ரசிகரை மைதானத்தில் வெளியேற்றினர். இதனால் கொஞ்ச நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளரை வேண்டுமென்றே மோதியுள்ளார்.
    • குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.

    இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×