search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Property"

    • திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் அபகரிப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உட்பட 16 பேரை கைது செய்தனர். கோவில் இடத்தை தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார்கள் பாலாஜி, ரமேஷ்கண்ணா ஆகியோர் மீதும் சட்டப்படி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி இன்று காலை வழுதாவூர் சாலையில் திராவிடர் விடுதலைக்கழகம் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

    • கோவில் நிர்வாகத்தை வசப்படுத்திக்கொள்ள ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • இதனை தட்டிக்கேட்டதால் கிரிமினல் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி எடுத்து வருவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி அடுத்துள்ள மம்மானியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் விநாயகர், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து முடிந்து 6 மாதங்கள் ஆகியது. துளசிராமன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவரை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்தை வசப்படுத்திக்கொள்ள ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கேட்டபோது மான், பன்றி போன்ற விலங்கினை வேட்டையாடி சாப்பிடுகின்றனர் என்று பொய்யான தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்கின்றனர்.

    வனத்துைறயினர் எங்கள் வீடுகளில் வந்து சோதனை நடத்தி விட்டு சமைத்த உணவு பாத்திரங்களையும் திறந்து பார்த்து அதுபோல் எதுவும் இல்லை என சென்று விட்டனர். கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதை தட்டிக்கேட்டதால் கிரிமினல் வழக்குகளில் எங்களை சிக்க வைக்க முயற்சி எடுத்து வருவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று அன்னதானம் நடந்தது.

    இதனை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து மதத்திற்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தவிர்க்க வேண்டும். மத ஊர்வலத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தி என் தலைமையின்கீழ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடைப்பெறுகிறது.

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன.

    மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்லி தேர்தலை சந்திப்போம்.

    மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை பொதுக்குழுவில் கடுமையாக சாடியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். பா.ஜனதா இதற்கு வெகுவிரைவில் பாடம் புகட்டும்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். #BJP #HRaja
    தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தென்காசி:

    தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்டு காப்பாற்ற வேண்டும், தமிழக கோவில்களில் சிலைகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து உண்டியலில் கோரிக்கை மனுவை போட்டனர்.

    நிகழ்ச்சிக்கு தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குற்றாலநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது :-

    தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோவில்களில் மொத்தம் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. சுமார் 7 ஆயிரம் சாமி சிலைகளை காணவில்லை. 1700 சிலைகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. அத்துடன் பல்வேறு கோவில்களில் உள்ள நகைகள், சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை சம்பவங்களை தீர விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய தயார் நிலையில் இருந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் என்ற அதிகாரியை தடுக்கும் நோக்கத்தில் இந்த விசாரணையை தேவையில்லாமல் இவரிடம் இருந்து பறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் பல்வேறு தீய சக்திகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. எனவே இந்து கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காசிவிசுவநாதரிடம் பிரார்த்தனை செய்து கோவில் உண்டியலில் மனுவை சமர்பித்துள்ளோம்.

    சம்பந்தப்பட்ட கோவில் நிலங்கள் மற்றும் சுவாமி சிலைகளை திருடிய உண்மை குற்றவாளிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால் இந்த புகாரை காசிவிசுவநாதரிடம் கொடுத்துள்ளோம். அவர் நிச்சயம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவில் சொத்து கோவிலுக்கே, இந்து அறநிலையத்துறையே வெளியேறு என வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர்:

    கோவில் சொத்து கோவிலுக்கே, இந்து அறநிலையத்துறையே வெளியேறு என வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டி வீதியில் இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநகர ஒருங்கிணைப் பாளர் ஆதிமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொருளாளர் பாஸ்கர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    இந்து முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×