search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே கோவில் சொத்தை அபகரிக்க முயலும் கும்பல் மீது புகார்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

    வடமதுரை அருகே கோவில் சொத்தை அபகரிக்க முயலும் கும்பல் மீது புகார்

    • கோவில் நிர்வாகத்தை வசப்படுத்திக்கொள்ள ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • இதனை தட்டிக்கேட்டதால் கிரிமினல் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி எடுத்து வருவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி அடுத்துள்ள மம்மானியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் விநாயகர், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து முடிந்து 6 மாதங்கள் ஆகியது. துளசிராமன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவரை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்தை வசப்படுத்திக்கொள்ள ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கேட்டபோது மான், பன்றி போன்ற விலங்கினை வேட்டையாடி சாப்பிடுகின்றனர் என்று பொய்யான தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்கின்றனர்.

    வனத்துைறயினர் எங்கள் வீடுகளில் வந்து சோதனை நடத்தி விட்டு சமைத்த உணவு பாத்திரங்களையும் திறந்து பார்த்து அதுபோல் எதுவும் இல்லை என சென்று விட்டனர். கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதை தட்டிக்கேட்டதால் கிரிமினல் வழக்குகளில் எங்களை சிக்க வைக்க முயற்சி எடுத்து வருவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×