search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "substandard"

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
    • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

    • சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
    • கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.

    இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட னர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் 13 வழக்குகளில் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    அதில், கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சவுமியாசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பொதுமக்கள் எந்த ஒரு வணிக நிறுவனத்திற்கு சென்றாலும் உணவுப்பொருட்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப்பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய உணவுப்பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அந்த பொருளை உடனடியாக மாற்றி வாங்கி தரப்படும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பி.ஐ.எஸ். உள்ளிட்ட எண்கள் இல்லை என்றால் அது போலியானது.

    கடந்த 6 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வகத்தில் இருந்து வரப்பெற்ற முடிவினை தொடர்ந்து தரமில்லாத 30 உணவு பொருட்களை விற்பனை செய்த உணவு வணிக நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழக்கு தொடரப்பட்டது. அவரின் துரித விசாரணையின் முடிவில் அபராத தொகையாக அந்த நிறுவனத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் கலப்படம் பற்றிய புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    ×