search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரமற்ற"

    • ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட் கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
    • சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

    ஆய்வு

    அதன்பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சுல்தான் பேட்டைபகுதிகளில் உள்ள சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் வைத்தி ருந்த சில்லி பவுடர்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சி களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.

    அபராதம்

    இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற 6 கிலோ சில்லி பவுடர்களை பறி முதல் செய்தனர்.

    தொடர்ந்து ஆய்வு செய்து தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்த அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்ற தரமற்ற உணவு பொருட் களை தயாரித்தாலோ, காலாவதியான சில்லி பவுடர் பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
    • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

    • தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.
    • மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    ×