search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sterlite factory"

    • இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு என வைகோ கூறியுள்ளார்.
    • இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து கவர்னர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்து விட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்திவைத்தாலே நிராகரிப்பதாகி விடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார். #BanSterlite #TalkAboutSterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை துரிதம் காட்டாத அரசு, மிகப்பெரிய மக்கள் போராட்டத்துக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றியது. ஆனால், அதற்காக 13 பேர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது.

    இந்த விவகாரம் பூதாகரமாகி வெடித்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.



    இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் ஒன்றான ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசிய அதன் தலைவர் அணில் அகர்வால், மிக விரைவில் ஆலை திறக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், தமிழகத்தில் 3 இடங்களில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Sterlite
    தேவைப்பட்டால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழு தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் கொட்டப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோவும் உடனிருந்தார். 



    இந்நிலையில், ஆய்வு குழுவினர் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினர். சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழு தலைவர் தருண் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை, கிராமங்கள், கழிவு கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த பின்னரே, பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite #TarunAgarwal
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்று மாலை வருகை தந்த 3 பேர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகை தந்தனர்.



    இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30 மணிக்கு இந்தக் குழு மக்களிடம் கருத்து கேட்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் தாமிர தாதுக்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து இன்று நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு. #ThoothukudiFiring #ArunaJagadeesan #TNGovt
    சென்னை:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.
     
    கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடந்தது.



    3-வது கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அனைவரும் ஆஜராகி ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு வாக்குமூலம் அளித்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த, அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. #ThoothukudiFiring #ArunaJagadeesan #TNGovt
    தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #sterlite #thoothukudiprotest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழ அரசடி பஞ்சாயத்து துப்பாஸ்பட்டி கிராம மக்கள் சுமார் 35-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எதிர்பாராத விதமாக பொய் பிரசாரங்கள், கேன்சர் மற்றும் பல நோய்களை இந்த ஆலை பரப்புகிறது என்று மக்களிடம் மூளைச்சலவை செய்து, ஆலையை தற்காலிகமாக மூடி நாட்டின் அமைதியை சீர்குலைத்து விட்டனர். இந்த ஆலை கடந்த 22 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் எங்கள் கிராம மக்கள் பலர் வேலைகளை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் கருதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்து இருந்தனர். #sterlite #thoothukudiprotest
    மறைமுகமாக திறக்க முயற்சிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பின்னர் ஆலை மூடப்பட்டது.

    இந்த ஆலை மீண்டும் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. தற்போது மூளை சலவை செய்யப்பட்டு அப்பாவி மக்கள் மூலம் ஆலையை திறக்க கோரி போலியாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மறைமுகமாக ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை திறக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களை திரட்டி ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதில் துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன், கோட்டாளமுத்து, அம்மா பேரவை செயலாளர் பிரபாகரன், ஓட்டுனர் அணி இணை செயலாளர் முத்துமாலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களது அடிப்படை வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வசதி இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு, நாங்களும், எங்களை சுற்றியுள்ள குடும்பங்களும் பயன்பெற முடியும். எங்கள் கிராமத்தின் நிலையை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, கல்வி உதவித்தொகை என கடந்த 22 ஆண்டுகளாக செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறோம். இந்த ஆலை மூலமாக எங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நிலையில், பல்வேறு அன்னிய சக்திகளின் தூண்டுதலின் காரணமாக போராட்டம் நடைபெற்று வன்முறையாக மாறியது. இதையடுத்து ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரதாது, ராக்பாஸ்பேட், நிலக்கரி, தாதுமணல் ஆகியவற்றை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த ஆலையை சார்ந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல பிரச்சினைகளில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்த நாங்கள் நல்ல உடல்தகுதியுடன் தான் உள்ளோம். ஆனால் வதந்திகளால் மக்கள் உணர்வு தூண்டப்பட்டு பலரின் வேலை பறிபோகும் அளவிற்கு போராட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரக்கேடு விளைவிக்கும் செயலை செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அன்னிய சக்திகள் எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. எங்கள் வாழ்வாதாரம் மீண்டும் மலர ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வந்த அலுவலர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது.

    இதனிடையே ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் ஒப்பந்ததாரர்களும் இதை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. அந்த ஆலை இனி திறக்கப்படாது என்று அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக ஆலை ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு கடந்த மே மாதம் 22-ந்தேதி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில், ஆலையில் உள்ள கந்தக அமிலம் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    மேலும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வந்த அலுவலர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் WWW.thoothukudi.online என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலைபார்த்து, தற்போது வேலைவாய்ப்பற்ற ஊழியர்கள், அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் தனியார் நிறுவனத்தினரும், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயோ டேட்டாவை பார்த்து தகுதி மற்றும் காலிப்பணியிடத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த இணைய தளத்தின் வாயிலாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலுவலர்கள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயோ டேட்டாவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #Sterlite
    தூத்துக்குடி:

    தமிழக அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று மாலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆலையின் முன்பு குவிந்தனர்.

    ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட உடன் அவர்கள் தைத்தட்டியும், கைகளை உயர்த்தியும் கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் ஒன்றிணைந்து போராடியதால் கிடைத்த வெற்றி. துக்கத்திலும் சந்தோஷமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்த அரசுக்கும், மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் ஒற்றுமையுடன் போராடியதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது” என்றார்.


    தூத்துக்குடியைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் கூறுகையில், “கடந்த 23 ஆண்டுகளாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அரசு அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. தற்போது, 100 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்திய போதும் அரசு கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து 13 பேரின் உயிர்களை இழந்தும், பலர் ரத்தம் சிந்தியும் உள்ளனர். இப்படி கஷ்டப்பட்டு தான் இந்த உத்தரவை பெற்றுள்ளோம். இது திருப்தி அளிக்கிறது. இதே நேரத்தில் வேதாந்தா அதிபர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து ஆலையை இயக்க முயற்சி செய்வார். இதனால் மாநில அரசு தக்க நடவடிக்கைகளை தற்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

    பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. இது மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. 13 உயிர்களை இழந்து இருக்கிறோம். அரசு மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது” என்றார்.


    மடத்தூரைச் சேர்ந்த பொன்பாண்டி கூறும்போது, “ஆலை மூடப்பட்டு இருப்பது கிராமமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அரசு கண்டுகொள்ளவில்லை. 13 உயிர்கள் போன பிறகு தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் உள்ளது. அதே நேரத்தில் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை இயக்குவதற்காக வழக்கு தொடர்ந்தால் அதை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்” என்றார்.

    தூத்துக்குடியை சேர்ந்த ஜெரால்டு ரவி என்பவர் கூறுகையில், “தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளித்து ஆலையை மூடிய அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் இந்த நிகழ்வுக்காக தங்களின் உயிரை தியாகம் செய்த 13 சொந்தங்களும், கை, கால்களை இழந்தும் வேதனைப்பட்டோரை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. போராட்டத்தில் இறந்த சொந்தங்கள் அனைவருக்கும் அவரவர் மத அடிப்படையில் சடங்குகள் நடத்தப்பட்டு, ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நினைவகம் கட்ட வேண்டும்” என்றார். #Sterlite #SterliteProtest
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #BanSterlite #MKStalin
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என காரசாரமாக கூறினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்  என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2013ல் நாங்கள் ஆலையை மூடுவதுபோல் மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள் என்ற கண் துடைப்பு நாடகத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் நடத்தியதை போல், இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் முதலமைச்சருக்கு உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கிறது என்றால் உரிய சட்டமுறைகளின் படியும், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டியும் ஆலையின் பாதிப்புகளை அரசு ஆணையில் பட்டியலிட்டு உத்தரவிடுவதே உரிய தீர்வாக அமையும் என பதிவிட்டுள்ளார். #BanSterlite #MKStalin
    ×