என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » villagers demand
நீங்கள் தேடியது "Villagers demand"
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #sterlite #thoothukudiprotest
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழ அரசடி பஞ்சாயத்து துப்பாஸ்பட்டி கிராம மக்கள் சுமார் 35-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எதிர்பாராத விதமாக பொய் பிரசாரங்கள், கேன்சர் மற்றும் பல நோய்களை இந்த ஆலை பரப்புகிறது என்று மக்களிடம் மூளைச்சலவை செய்து, ஆலையை தற்காலிகமாக மூடி நாட்டின் அமைதியை சீர்குலைத்து விட்டனர். இந்த ஆலை கடந்த 22 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் எங்கள் கிராம மக்கள் பலர் வேலைகளை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் கருதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்து இருந்தனர். #sterlite #thoothukudiprotest
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழ அரசடி பஞ்சாயத்து துப்பாஸ்பட்டி கிராம மக்கள் சுமார் 35-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எதிர்பாராத விதமாக பொய் பிரசாரங்கள், கேன்சர் மற்றும் பல நோய்களை இந்த ஆலை பரப்புகிறது என்று மக்களிடம் மூளைச்சலவை செய்து, ஆலையை தற்காலிகமாக மூடி நாட்டின் அமைதியை சீர்குலைத்து விட்டனர். இந்த ஆலை கடந்த 22 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் எங்கள் கிராம மக்கள் பலர் வேலைகளை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் கருதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்து இருந்தனர். #sterlite #thoothukudiprotest
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நூர்சாகிபுரம் ரெயில்வே கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
இந்தப்பணியின் போது, காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, அருந்ததியர் காலனி, காளீஸ்வரி காலனி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பால சுப்பிரமணியாபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், கன்னார்பட்டி காலனி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்துள்ளதால் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ரெயில்வே சுரங்கப்பணி தொடங்கும் போது மாற்றுப்பாதை அமைக்காமல் விட்டதால் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் குடி தண்ணீர் குழாயும் உடைந்து கிடைக்காமல் போனதால் பெரும் இன்னலுக்கு மேற்கண்ட கிராமத்தினர் ஆளாகி உள்ளனர்.
எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் காலம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் இடத்திற்கு மேற்கு புறம் உள்ள ரெயில்வே மழை நீர் கடக்கு சிறிய பாலம் வழியாக குழாயை கொண்டு சென்று குடிதண்ணீர் வழங்கவும், மாற்றுப்பாதை அமைத்து பள்ளி நேரங்களிலாவது அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நூர்சாகிபுரம் ரெயில்வே கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
இந்தப்பணியின் போது, காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, அருந்ததியர் காலனி, காளீஸ்வரி காலனி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பால சுப்பிரமணியாபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், கன்னார்பட்டி காலனி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்துள்ளதால் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ரெயில்வே சுரங்கப்பணி தொடங்கும் போது மாற்றுப்பாதை அமைக்காமல் விட்டதால் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் குடி தண்ணீர் குழாயும் உடைந்து கிடைக்காமல் போனதால் பெரும் இன்னலுக்கு மேற்கண்ட கிராமத்தினர் ஆளாகி உள்ளனர்.
எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் காலம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் இடத்திற்கு மேற்கு புறம் உள்ள ரெயில்வே மழை நீர் கடக்கு சிறிய பாலம் வழியாக குழாயை கொண்டு சென்று குடிதண்ணீர் வழங்கவும், மாற்றுப்பாதை அமைத்து பள்ளி நேரங்களிலாவது அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X