search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anil agarval"

    தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார். #BanSterlite #TalkAboutSterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை துரிதம் காட்டாத அரசு, மிகப்பெரிய மக்கள் போராட்டத்துக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றியது. ஆனால், அதற்காக 13 பேர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது.

    இந்த விவகாரம் பூதாகரமாகி வெடித்த பின்னர் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.



    இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் ஒன்றான ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசிய அதன் தலைவர் அணில் அகர்வால், மிக விரைவில் ஆலை திறக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், தமிழகத்தில் 3 இடங்களில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Sterlite
    பிரிட்டனின் தொழிலாளர் கட்சி கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. #Sterlite #Vedanta #LondonStockExchange
    லண்டன்:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் வீட்டு முன்னர் அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியி வேதாந்தா நிறுவனத்தை நீக்க வேண்டும் என லண்டன் பங்குச்சந்தைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

    இந்நிலையில்,  வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளை வோல்கன் டிரஸ்ட் வாங்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×