search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Praveen Kumar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு.
    • ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.

    2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.

    குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து ராக்கதன், மேதகு 2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.

    28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களிடையே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை.
    • அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    2011 ஒருநாள் உலகக் கோப்பையை எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த உலகக் கோப்பை தனி ஒருவரால் பெற்றதில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை. ஒருவரால் ஒரு போட்டியை வெல்ல முடியாது. அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் ரன்களை எடுத்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை எடுத்தார். கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் ரன்களை அடித்தார். டோனி 2011 இறுதிப் போட்டியில் ரன்களை அடித்தார்.

    எனவே இது ஒரு அணி வெற்றியாகும். பேட்டர்களில் குறைந்தது மூன்று பேர் ஃபார்மில் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு பந்து வீச்சாளர்களாவது விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. அது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆக கூட இருக்கலாம். ஒரு வீரரால் உங்கள் போட்டிகளை வெல்ல முடியாது.

    இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

    இதே போல ஒருவரால் மட்டுமே வெற்றி கிடைக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர டோனிக்கு எதிரான பல கருத்துக்களை கம்பீர் கூறியுள்ளார்.

    • நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை.
    • டெல்லி அணிக்காக விளையாட விரும்பினேன்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர். 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை டோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார்.

    இவர் கடந்த சில நாட்களாக கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

    இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை லலித் மோடி அழித்து விடுவேன் என மிரட்டியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் பெங்களூர் எனது இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றும் உணவு எனக்கு பிடிக்கவில்லை. டெல்லி மீரட்டுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருந்து எனது வீட்டுக்கு செல்ல சுலபமாக இருக்கும்.

    ஆனாலும் ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாங்க. அது ஒப்பந்தம் என்று தெரியவில்லை. நான் பெங்களூரு அணிக்கு விளையாட விரும்பவில்லை டெல்லிக்காக விளையாட விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து மிரட்டினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என கூறினார்.

    இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

    • இந்திய அணியில் அனைத்து வீரர்களும் குடித்தனர்.
    • ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பிரவீன் குமார். 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய அணி பிரதான பவுலர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவுட் ஸ்விங், இன் ஸ்விங் மூலமாக பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். அவர், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ள அவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இந்நிலையில் அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இருண்ட ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.

    சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர். ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை தேர்வு செய்யவில்லை.

    இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக இருந்தது.

    என்று பிரவீன் குமார் கூறினார்.

    • வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அவுட் சுவிங், இன் சுவிங் என புது பந்தில் மிரட்டுவார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்.

    2011- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    இந்நிலையில் மீரட்டில் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #APHighCourt #ChiefJustice #JusticePraveenKumar
    விஜயவாடா:

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது.

    முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

    மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர்நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  அனுமதி அளித்தது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 26-ம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்க வேண்டிய இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும்.

    ஆனால், அமரவாதி நகரில் உயர்நீதிமன்றம் கட்டும் பணிகள் நிறைவடையாததால் விஜயவாடா நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக உயர்நீதிமன்றம் இயங்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்தது.



    இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
     
    விஜயவாடா நகரில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நீதிபதி பிரவீன் குமாருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றனர்.

    இதற்கிடையே, அமராவதி நகரில் இன்னும் சரியாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர மாநில வக்கீல்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நேற்று நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்துள்ளது. #APHighCourt #ChiefJustice #JusticePraveenKumar 
    ×