என் மலர்
நீங்கள் தேடியது "music director"
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.
சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார். பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.
இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினரின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சபேஷின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேனிசைத் தென்றல்
தேவாவின் இளவல்
இசையமைப்பாளர்
சபேஷ் மறைவு
மனவலியைத் தருகிறது
கலையன்றி
வேறொன்றும் அறியாத
இசையே வாழ்வென்று வாழ்ந்த
ஒரு சகோதரர் சபேஷ்
அமைதியானவர்;
அவர் பேசியதைவிட
வாசித்ததே அதிகம்
அவரது மறைவு
தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல
வாசிக்கப்படும்
இசைக்கருவிகளுக்கெல்லாம்
இழப்பாகும்
ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்
அடங்கிவிட்டான்
அவரது ஆருயிர்
அமைதி பெறட்டும்
ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் மார்ட்டின் கிளெமெண்ட்
- ஜூன் 25 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், 'யுவன் ராபின்ஹுட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட் இசை பணியில் பிஸியாக இருக்கிறார்.
ஒரு பக்கம் இசை என்றால் மறுபக்கம் இயக்கம் என்று 5 திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், இயக்கிய கன்னட திரைப்படமான 'மார்ட்டின் யு' மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வித்தியாசமான மிஸ்டரி திகில் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தின் மூலம் இயக்குநராக மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் கவனம் ஈர்த்த மார்ட்டின் கிளெமெண்ட், தமிழ் சினிமாவிலும் தனது இசை மூலம் நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன் என்ற நம்பிக்கையில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மார்ட்டின் கிளெமெண்ட் மனைவி ஷர்மிளா பிரசவத்திற்காக திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 25 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதால் ஏற்கனவே பெரும் மகிழ்ச்சியில் இருந்த மார்ட்டின் கிளெமெண்ட் தந்தையாகியுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதில், கூடுதல் சிறப்பு என்னவென்றால், மார்ட்டின் கிளெமெண்ட்டின் மனைவி ஷர்மிளாவின் பிறந்த தினமும் இதே ஜூன் 25 தான். ஆம், தாயும், மகனும் ஜூன் 25 ஆம் தேதி பிறந்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பே மட்டற்ற மகிழ்ச்சியை தரும் நிலையில், இப்படி ஒரு சிறப்புடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையால் மார்ட்டின் கிளெமெண்ட்டின் குடும்பம் அளவுக்கடந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.
சென்னையில் பிறந்து, பெங்களூரில் படித்து வளர்ந்த மார்ட்டின் கிளெமெண்ட், கன்னட திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமானாலும், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் என்னவோ, திண்டிவனத்தை சேர்ந்த ஷர்மிளாவை திருமணம் செய்துக் கொண்டவர், தற்போது சினிமாவுக்காக சென்னை டூ பெங்களூர் என்று பயணித்து தனது சினிமா பணியாற்றி வருகிறார்.
- காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
- வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
- படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'.
தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறாராம். இசை என்றாலே அந்த பிரபலத்தை தேடி பலர் செல்ல நண்பர் ஒருவரும் தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டாராம். ஆனால், இசையமைப்பாளரோ புகழ் போதையில் அதலாம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம்.
இசையமைப்பாளர் ஏன் இப்படி சொன்னார் என்று யோசித்த நண்பருக்கு அதற்கு பிறகு தான் தெரிந்ததாம் இந்த செயலுக்கு பின்னால் பெரிய தலைகளின் தலையீடு உள்ளது என்று. இதனால் மனம் வெறுத்த நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாராம்.
- 2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு.
- ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது.
குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து ராக்கதன், மேதகு 2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களிடையே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
- கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்களிலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. மேலும் இருவரும் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல உள்ளனர் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நட்சத்திர ஜோடியாக வளம் வந்த ஜி.வி. - சைந்தவி தம்பதி பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் விக்ரமின் 'தங்கலான்', 'வீர தீரச் சூரன்', பாலாவின் 'வணங்கான்', சிவகார்த்திகேயனின், 'அமரன்', தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதம்.
- இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
அதனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.
மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை.
ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
- உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தமிழக அரசை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






