search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒருவரால் மட்டும் வெற்றி கிடைத்திடாது.. 2011 உலகக் கோப்பை குறித்து பிரவீன் குமார் கருத்து
    X

    ஒருவரால் மட்டும் வெற்றி கிடைத்திடாது.. 2011 உலகக் கோப்பை குறித்து பிரவீன் குமார் கருத்து

    • இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை.
    • அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    2011 ஒருநாள் உலகக் கோப்பையை எம்எஸ் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த உலகக் கோப்பை தனி ஒருவரால் பெற்றதில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மல்யுத்தம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட விளையாட்டு இல்லை. ஒருவரால் ஒரு போட்டியை வெல்ல முடியாது. அந்த தொடரில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் ரன்களை எடுத்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை எடுத்தார். கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் ரன்களை அடித்தார். டோனி 2011 இறுதிப் போட்டியில் ரன்களை அடித்தார்.

    எனவே இது ஒரு அணி வெற்றியாகும். பேட்டர்களில் குறைந்தது மூன்று பேர் ஃபார்மில் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு பந்து வீச்சாளர்களாவது விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. அது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆக கூட இருக்கலாம். ஒரு வீரரால் உங்கள் போட்டிகளை வெல்ல முடியாது.

    இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

    இதே போல ஒருவரால் மட்டுமே வெற்றி கிடைக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர டோனிக்கு எதிரான பல கருத்துக்களை கம்பீர் கூறியுள்ளார்.

    Next Story
    ×