search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எல்லாரும் குடித்தார்கள்.. நான் குடித்ததை மட்டும் தப்பா பேசுனாங்க.. பிரவீன் குமார் ஓபன் டாக்
    X

    எல்லாரும் குடித்தார்கள்.. நான் குடித்ததை மட்டும் தப்பா பேசுனாங்க.. பிரவீன் குமார் ஓபன் டாக்

    • இந்திய அணியில் அனைத்து வீரர்களும் குடித்தனர்.
    • ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பிரவீன் குமார். 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய அணி பிரதான பவுலர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவுட் ஸ்விங், இன் ஸ்விங் மூலமாக பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். அவர், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ள அவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இந்நிலையில் அவர் எங்கு எப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இருண்ட ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.

    சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர். ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை தேர்வு செய்யவில்லை.

    இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக இருந்தது.

    என்று பிரவீன் குமார் கூறினார்.

    Next Story
    ×