search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic products"

    • எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், அதிகாரிகள் எட்டயபுரம் மேலவாசல், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.
    • அதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், கப் பறிமுதல் செய்யப்பட்டது.

    எட்டயபுரம்:

    சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ய அறிவுரை வழங்கியது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வழிகாட்டுதலின்படி எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பூவையா, மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் எட்டயபுரம் மேலவாசல், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.

    அதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், கப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிமையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    எட்டயபுரம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் மகேஸ்வரி மழைக்காலங்களில் நோய் பரவுவது குறித்தும், நோய் பரவாமல் தடுப்பது குறித்தும் எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி பாலாற்றில் ரசாயன கழிவு பிளாஸ்டிக் கேன்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முகழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீ விபத்தை பார்த்த பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்தது.
    • பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் உலக மண் தினத்தினை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழி கண்காட்சி நடைபெற்றது.

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி. குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அதற்கான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

    அதனடிப்படையில், ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கான மாற்றுவழி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறும்.இதில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு பதிலான மாற்று பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சி முதன்முத லாக ராஜபாளையம் நகராட்சியில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நடத்தப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலான விஷயமாகும். அதனால் பொதுமக்கள் அதனை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கி நகராட்சிக்கு உதவிட வேண்டும்.

    மேலும் பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி, சுற்றுப்புறச்சூழலை காத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜ பாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருப்பூர் பாதுகாப்பு சங்கம் நிறுவன செயலாளர் வீரபத்மன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் காளி, பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
    • கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி:

    அவிநாசி- கோவை சாலையில் உள்ள உலா் பழக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக பேரூராட்சி நிா்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

    அப்போது கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளா், தட்டு, மேசை விரிப்புகள் உள்ளிட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
    • அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, நீர்நிலைகளில் தேங்கி பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளாக அதிகளவு வெளியேற்றப்பட்ட கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கவர்கள், பேப்பர் பிளேட், டம்ளர், கப், விரிப்பு உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    உடுமலை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த போது கோவையிலிருந்து பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு இறக்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது.அவற்றை கண்காணித்து சத்திரம் வீதி, பைபாஸ் ரோட்டிலுள்ள மளிகை கடைகளில் இருந்து 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வந்த வாகனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 7 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என 35 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மத்திய அரசு கடந்த 1-ந்தேதி பிளாஸ்டிக் கேரிப்பை போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தது. இதன்படி தமிழக அரசு பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவுரையில் விழுப்புரம் நகர சபை தலைவர் தமிழ்ச்செல்வி விழுப்புரம் நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் ரமணன், சுகாதாரப் பணி யாளர்கள் உள்ளிட்டோர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் சிறு சிறு கடைகள் சாலை ஓரங்களில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.

    மேலும் விழுப்புரம் பாகர்சா மற்றும் மகாத்மா காந்தி சாலை இரு வீதிகளிலும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தமிழரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 20 கிலோ முதல் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தில்10,000வரை வசூலிக்கப்பட்டது.

    மேலும் பறிமுதல் வேட்டை பின் கமிஷனர் இது குறித்து கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதை மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அங்குள்ள காய்கறி கடை பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை வைத்திருக்கும் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தார். 

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
    சென்னை:

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



    தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் ஒப்படைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை காரணமாக பார்சல் சாப்பாடு விலை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் ஓட்டல்களில் பார்சல் வாங்கும் போது சாம்பார், ரசம், மோர், காய்கறி போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கப்பட்டு வந்தது. அவை அனைத்தும் பிளாஸ்டிக் பைகளிலேயே வினியோகம் செய்யப்பட்டது.

    தற்போது அதற்கு மாற்றாக ஓட்டல்கள் அனைத்திலும் மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் குவளைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பைகள் விலை உயர்வு என்பதால் பார்சல் கட்டணமும் உயர்ந்துள்ளது.

    பஸ் நிலையம் அருகே உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இது போன்ற பைகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒரு பார்சல் சாப்பாடு ரூ.80 என இருந்த நிலையில் தற்போது ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் காலை சிற்றுண்டியும் மாற்று பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் தெரிவிக்கையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தற்போது எளிதில் மக்கும் தன்மை கொண்ட அரசால் சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை உயர்வு என்ற போதும் வாடிக்கையாளர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

    அடுத்த முறை வரும் போது பாத்திரம் எடுத்து வருவதற்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கிறோம். சிறிய ஓட்டல்களில் நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயர்வு மிகுந்த சுமையை ஏற்படுத்தும். அவர்களும் விரைவில் பழைய நிலைக்கே பாத்திரம் கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல பழகிக் கொள்வார்கள் என்றனர்.

    தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என விருதுநகர் தொழில்துறை சங்கம் கோரி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணை எண் 84-ன்படி குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட் கள் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. இதனால் குறு, சிறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க வாய்ப்பு இருக்காது. பிற மாநிலங்களில் தடை இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தடை செய்வதால் நம்முடைய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் பிளாஸ்டிக் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் முறையை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பிளாஸ்டிக் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இவைகளை நிறைவேற்றுவதால் கழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.

    எனவே பொதுமக்கள் நலனிலும், குறு,சிறு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு அமல்படுத்த உள்ள தடையை உடனடியாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    சேலம்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் பிளாஸ்டிக் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் தடை பற்றிய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடன் வாங்கி தொழில் தொடங்கிய வணிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை என்பதை அரசு அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் தமிழக அரசும் 2020-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க உள்ளோம்.

    இதுதவிர பட்டாசு வெடிப்பதற்கு தடை மற்றும் உணவு பொருட்களில் உள்ள பல்வேறு சட்ட விதிகளை மாற்றக்கோரி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளோம். சேலம் செவ்வாய்பேட்டை மேம்பாலத்தை விரைவில் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துணிப்பை பயன்பாட்டுக்கு வியாபாரிகள் மாறி இருக்கின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ‘உன்னத உதகை‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தவிர மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ரசீது வினியோகிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட வியாபாரிகள் துணிப்பை பயன்பாட்டுக்கு மாறி இருக்கின்றனர். தங்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்து வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், தேநீர் விற்பனை நிலையங்களில் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்து தரப்படுகின்றன. மேலும் பேக்கிங் செய்வதற்கு செய்தித்தாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பைகளை கொண்டு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.

    மேலும் தமிழக அரசும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ×