search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest strike"

    சூடானில் சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில், விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    கர்த்தூம்:

    சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் கடந்த மாதம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்நிலையில், சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி 48 மணிநேர பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

    தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். துறைமுகங்கள், எண்ணெய் வயல் சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை.

    கர்த்தூம் விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஊழியர்கள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    சேலம்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் பிளாஸ்டிக் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் தடை பற்றிய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடன் வாங்கி தொழில் தொடங்கிய வணிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை என்பதை அரசு அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் தமிழக அரசும் 2020-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க உள்ளோம்.

    இதுதவிர பட்டாசு வெடிப்பதற்கு தடை மற்றும் உணவு பொருட்களில் உள்ள பல்வேறு சட்ட விதிகளை மாற்றக்கோரி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளோம். சேலம் செவ்வாய்பேட்டை மேம்பாலத்தை விரைவில் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×