search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paver block road"

    • தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சியில் தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் மாநில பகிர்வு நிதியியல் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமி, தேவி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர் சேக்முகமது, சந்தானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆத்தூர் பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேவா்பிளாக் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • இதற்கான பணிகளை ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தாா்.

    ஆத்தூர்:

    ஆத்தூா் பேரூராட்சி 7-வது வாா்டு பேட்டைதெருவில் ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேவா்பிளாக் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் நிா்வாக அதிகாரி முருகன், பொறி யாளா் ஆவுடைப்பாண்டி, மேற்பாா்வையாளா் இளையராஜா, கவுன்சிலா்கள் அசோக்குமாா், முத்து, கேசவன், சிவா, பாலசிங், கவுஹா்ஜான், சங்கரேஸ்வரி ராம்குமாா், கோமதி, வசந்தி, கமலச்செல்வி உள்ளிட் டோா் கலந்து கொண்டனா்.

    • நெல்லை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட காரியநாயனார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது.
    • ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட காரிய நாயனார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ், மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து, கவுன்சிலர் சுந்தர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அருள்ராஜ், மண்டல தலைவர் ராஜேந்திரன், ஊர் தலைவர் சேர்மக்கனி, ஒப்பந்ததாரர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:-

    ஆலங்குளம் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில், ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஆலங்குளம் பேரூராட்சி, 11-வது வார்டு, அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில், 15-வது மானியக்குழு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில், 11-வது வார்டு உறுப்பினர் வென்சிராணி, 12-வது வார்டு உறுப்பினர் எஸ்.டி.சாலமோன்ராஜா, தொழிலதிபர் ஏ.மோகன்லால், சீதாராமன், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் அருள்ராஜ், செல்வின், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • ராமச்சந்திராபுரத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள நியாய விலை கடையை புதுப்பித்து புதியக்கட்டிடம் அமைப்பதற்கும், பழுதடைந்த நிலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தினை பார்வையிட்டு புதிய கூட்டுறவு சங்க கட்டிடம் அமைப்பதற்கும், வாறுகால் பாலம் அமைப்பதற்கும், கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, வருவாய் ஆய்வாளர் மாடசாமி, மின் வாரிய உதவி பொறியாளர் செல்வகுமார், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் யுவராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கூட்டுறவு சங்க தலைவர் நவநீதகண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு விழாக்களில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்கக்கூடாது என தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது
    • நிதி வருவாயை உயர்த்துவதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பினை தி.மு.க. அரசு செய்யவில்லை

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர். இதையடுத்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

    அரசு விழாக்களில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பி னர்களை அழைக்கக்கூடாது என தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. சட்டமன்றத்தில் இது குறித்து பிரச்சனை எழுப்பப்படும்.

    மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் அரசியல் காழ்புணர்ச்சி இருக்க கூடாது.இந்த ஆட்சி தவறான முன் உதாரணமாக இருந்து வருகிறது.எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி தான் முதன்மையானது என்று கூறுவார்கள்.உண்மையிலே எதிர்க்கட்சி என்றால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அ.தி.மு.க. தான். ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் நம்பர் ஒன் அ.தி.மு.க. தான். வரும் பாராளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் நாங்களும் தனியாக நிற்க தயார்.

    ஏற்கனவே அ.தி.மு.க. தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை பெற்றுள்ளது.

    நாங்கள் மக்கள் பிரச்சினைகளை சட்டமன்ற கூட்டத் தொடரில் எடுத்து ரைப்போம். அப்போது யார் எதிர் கட்சி என்பது தெரி யும். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. நிதி வருவாயை உயர்த்து வதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பினை தி.மு.க. அரசு செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியை கூட முழுமையாக தர முடியாமல் பாதி பாதியாக தரக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.

    அ.தி.மு.க.வில் எவ்வித பிரிவும் இல்லை. ஒரு சிலர் பிரிந்து சென்றுள்ளனர். இது காலங்காலமாக நடப்பது தான். அ.தி.மு.க.வில் பிளவு கிடையாது.பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களில் வெற்றி பெறும். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பிரச்சினை தொடர்பாக சபாநாயகர் எடுக்கும் முடிவை தொடர்ந்து அ.தி.மு.க. நடவடிக்கை இருக்கும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×