search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி 32-வது வார்டில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
    X

    சாலை அமைக்கும் பணியை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நெல்லை மாநகராட்சி 32-வது வார்டில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி

    • நெல்லை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட காரியநாயனார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது.
    • ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட காரிய நாயனார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ், மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து, கவுன்சிலர் சுந்தர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அருள்ராஜ், மண்டல தலைவர் ராஜேந்திரன், ஊர் தலைவர் சேர்மக்கனி, ஒப்பந்ததாரர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×