search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pant"

    ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான்’ என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறினார். #BharatArun #Dhoni #RishabhPant
    மொகாலியில் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முக்கியமான கட்டத்தில் ஸ்டம்பிங்கை கோட்டை விட்டார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

    இதுகுறித்து இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் நேற்று கேட்டபோது ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான். விக்கெட் கீப்பிங் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மேலும் கேப்டன் விராட் கோலிக்கு தேவையான நேரத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார்’ என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இப்போது பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 4, 6 மற்றும் 7 என்று பல வரிசைகளிலும் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அது மட்டுமின்றி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசுகிறார். இது அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்’ என்றார். #BharatArun #Dhoni #RishabhPant

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆன ரிஷாப் பந்த், இர்பான் பதான், ரெய்னாவுடன் இணைந்துள்ளார். #ENGvIND #RishabhPant

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாராவின் சிறப்பாக சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பாந்த் 5-வது விக்கெட் ஆக களமிறங்கினார். ரன் எடுப்பதை விட விக்கெட்டை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்ததால், அவர் மெதுவாகவே பந்துகளை சந்தித்தார். ரன்கள் எடுக்க முயற்சிக்கவில்லை.

    29 பந்துகள் சந்தித்த பாந்த் மொயின் அலி பந்தில் அவுட் ஆனார். 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆன பாந்த் இர்பான் பதான், ரெய்னா உடன் இணைந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பதான் 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார். 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரெய்னா 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார். மேற்கண்ட இரு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

    மேலும், ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் பதான், ரெய்னா, பாந்த் ஆகிய மூவருமே இடக்கை பேட்ஸ்மேன்கள். மூவருமே சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்டில் இந்தியா ‘ஏ’ 253 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #INDA #Rahane #Pant #mohammedSiraj
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 16-ந்தேதி வொர்செஸ்டரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 197 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.



    ரகானே (48), ரிஷப் பந்த் (61) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் முகது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ×