search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onions"

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெங்காய விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
    • வெங்காயத்தின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மார்க்கெட்டுக்கு தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் லாரிகளில் வரும்.

    நாசிக், புனே, ஆந்திரா, ஆகிய பகுதியிலிருந்து புதுவைக்கு தினந்தோறும் 300 டன் வெங்காயம் வருவது வழக்கம். நாசிக், புனேவில் மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.

    நேற்று 150 டன் வெங்காயம் புதுவைக்கு வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ. 65-க்கு விற்கப்பட்டது.

    130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.

    அதுவும் மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே வெங்காயம் இருந்தது.

    சில்லறை கடைகளில் வெங்காயம் இல்லை. வெங்காயத்தின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது.

    • விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
    • பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நாடு முழுவதும் கொண்டாடப்டும் பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி. பலரும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்துவார்கள். விரதம் இருந்தும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதற்கு ஏற்ப உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பார்கள். சில உணவுப்பொருட்களை அறவே தவிர்ப்பார்கள். பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் பூண்டு, வெங்காயத்தையும் ஒதுக்கி வைப்பதுண்டு.

    நவராத்திரியின் போது பூண்டு, வெங்காயத்தை தவிர்ப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன. இந்து மதத்தில் உணவுப்பொருட்கள் ராஜசம், தமாசம், சாத்வீகம் என மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சாத்வீக உணவுகள் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

    பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி அல்லாத புரத உணவுகள் சாத்வீக உணவுகளாக குறிப்பிடப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம் மனதை அடக்க முடியும். சகிப்பு தன்மை, கருணை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாகவே வெளிப்படவும் செய்யும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரைவாக நீக்கும்.

    விரதத்தின்போது சாத்வீக உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகும். அதனால் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாவதற்கு குறைந்த நேரமே செலவாகும். அதனால் குடல் இயக்கங்களுக்கு ஓய்வு கிடைக்கும். உடலும் சோர்வின்றி இருக்கும். மேலும் சாத்வீக உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். மன நலனையும் மேம்படுத்தும். அதனால்தான் நவராத்திரியின்போது சாத்வீக உணவுகளை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கிறார்கள்.

    ஆயுர்வேதத்தின்படி வெங்காயம், பூண்டு இவை இரண்டும் தாமசம் வகை உணவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை உணவுகள் மனம், ஆன்மாவிற்கு இடையூறு ஏற்படுத்ததக்கூடியவையாக குறிப்பிடப்படுகின்றன. உணர்ச்சிகள், ஆசைகளை தூண்டுவது, பேராசை கொள்ள வைப்பது, மந்தநிலை, மனச்சோர்வு அடைவது போன்ற குணங்களை தூண்டக்கூடியவையாக கருதப்படுகின்றன.

    வெங்காயத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்தையும் ஏற்படுத்தக் கூடியது. பூண்டு உணர்ச்சிகளை, ஆசைகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் எதிர்மறையாக செயல்படக்கூடியது. அதனால் நவராத்திரி விரதத்தின்போது அவைகளை உட்கொள்வது நல்லதல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை வெங்காயம் வழங்கப்பட உள்ளது
    • வேளாண் விற்பனை வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் தகவல்

    குன்னம்,

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள வெங்காயம் வணிக வளாகத்தில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் எனும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் உத்தரவின்படி செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தை பார்வையிட வந்திருக்கிறேன்.சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல், பேக்கேஜ் செய்தல், அதை பத்திரமாக ஏற்றுமதி செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். உள் நாட்டிலும் வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் வணிகர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். இங்குள்ள வணிக வளாகத்தில் தினந்தோறும் வெங்காயம் ஏலம் நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். குளிர் பதன கிடங்கில் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை நீண்ட நாட்கள் இருப்பு வைப்பதில் சிக்கல் உள்ளது. வெங்காயத்தை குளிர் பதன கிடங்கில் நவீன தொழில்நுட்பம் மூலம் இருப்பு வைக்க முடியுமா என ஆலோசித்து வருகிறோம். சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அது குறித்து அரசுதான் முடிவு செய்ய முடியும்.விவசாயிகளுக்கு விதை வெங்காயம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குநர் முரளிதரன், வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனை குழு செயலாளர் சரசு, திருச்சி வேளாண் விற்பனை வாரிய பொறியாளர் சக்திவேல் மற்றும் வேளாண்மை விற்பனை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
    • மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    போரூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

    பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

    தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது.
    • ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    ராசிபுரம்:

    வெண்ணந்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர் மழை காரணமாக வெங்காய பயிர் திருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளானது. சின்ன வெங்காய பயிர், நடவு செய்து 20 முதல் 30 நாட்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல் அல்லது திருகல் நோய் ஏற்படுகிறது. பயிர் சுழற்சி முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதால் பயிரை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நல்ல வடிகால் வசதி யுள்ள நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 1 1/2 அடி உயரம் உள்ள பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் அற்ற தரமான விதைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு 1 கிலோ விதைக்கு 4 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து 24 மணி நேரம் உலர விட்டு விதைக்க வேண்டும்.

    கடைசி உழவின்போது ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோவிரிடி, 1 கிலோ சூடோமோனாஸ், 5 கிலோ வேம் ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து 7 நாட்கள் நிழலில் வைத்திருந்து நிலத்தில் இட லாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும்.

    தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும் ஆகையால் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்தி விட்டு கார்பெண்டாசிம் என்ற பூஞ்சான் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×