search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை
    X

    விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை

    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை வெங்காயம் வழங்கப்பட உள்ளது
    • வேளாண் விற்பனை வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் தகவல்

    குன்னம்,

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள வெங்காயம் வணிக வளாகத்தில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் எனும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் உத்தரவின்படி செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தை பார்வையிட வந்திருக்கிறேன்.சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல், பேக்கேஜ் செய்தல், அதை பத்திரமாக ஏற்றுமதி செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். உள் நாட்டிலும் வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் வணிகர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். இங்குள்ள வணிக வளாகத்தில் தினந்தோறும் வெங்காயம் ஏலம் நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். குளிர் பதன கிடங்கில் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை நீண்ட நாட்கள் இருப்பு வைப்பதில் சிக்கல் உள்ளது. வெங்காயத்தை குளிர் பதன கிடங்கில் நவீன தொழில்நுட்பம் மூலம் இருப்பு வைக்க முடியுமா என ஆலோசித்து வருகிறோம். சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அது குறித்து அரசுதான் முடிவு செய்ய முடியும்.விவசாயிகளுக்கு விதை வெங்காயம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குநர் முரளிதரன், வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனை குழு செயலாளர் சரசு, திருச்சி வேளாண் விற்பனை வாரிய பொறியாளர் சக்திவேல் மற்றும் வேளாண்மை விற்பனை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×