search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiri"

    • நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை கேமராக்கள் இயங்கவில்லை.
    • ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு பகுதியில் உள்ள ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை சில கேமராக்கள் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் உத்தரவு
    • மத்திய-மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்து கிடக்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஓவேலி மக்கள் இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்ட கலெக்டர், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், சுண்ணாம்பு பாலம் அருகே 500 மீட்டர் தொலைவுக்கு தார்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    எனவே அவற்றை உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனாலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்கண்ட பழுதடைந்த சாலையின்வழியாகதான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வருகின்றன.

    கூடலூர்-ஓவேலி நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்ட பகுதிகளை மேம்படுத்த வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    ஆனால் பல மாதங்கள் கடந்தபிறகும் மேற்கண்ட பழுதான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஓவேலி சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூரில் நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.

    நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்னுராஜ், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், இளைஞரணி மாநில துணை செயலாளர் பாலாநந்தகுமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

    • கனமழையின்போது இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை எப்படி மீட்பது என்று செயல்விளக்கம்
    • மலைபாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு புகைப்படம் எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தல்

    அருவங்காடு,

    நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தீயணைப்பு தீயணைப்புநிலையத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கனமழையின்போது எப்படி மீட்பது, இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றுவது ஆகியவை குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை சோதனை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் குன்னூர் மலைப்பாதை மட்டுமின்றி நிலச்சரிவு, மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, மலை பாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது, அருவிகளில் குளிக்கவும் செய்யக்கூடாது எனவும் போலீசார் அறிவுரை வழங்கினர்.

    • அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளதால் மரங்களில் அத்திப்பழங்கள் அதிகம் காய்த்து உள்ளன.
    • பயணிகள் மகிழ்ச்சி அடைந்து பறவைகளை போட்டோ எடுத்தும் ரசித்தும் செல்கின்றனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, அங்கு தற்போது மிதமான காலநிலை நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மலைப்பாதையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மரங்களில் பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு உள்ள மரங்களில் அத்திப்பழங்கள் அதிகம் காய்த்து உள்ளன.

    எனவே அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக திகழும் இருவாச்சி பறவைகள் அத்திப்பழம்சுவைப்பதற்காக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளன. அவை தனது நீண்ட அலகால் அத்திப்பழங்களை கொத்தி தின்று வருகின்றன.

    குன்னூர் பகுதியில் இருவாச்சி பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவற்றை போட்டோ எடுத்தும் ரசித்தும் செல்கின்றனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    அருவங்காடு,

    நீலகிரியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். அந்த நேரத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து குன்னூர் தீயணைப்புதுறை சார்பில் அங்கு உள்ள சுற்றுலா தலங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தண்ணீரில் அடித்து செல்லப்படுவோரை எப்படி மீட்பது, எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து ஊழியர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

    அப்போது மண் சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பது, வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். 

    • நீலகிரி மாவட்டம் தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் பொதுமக்கள். மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேனாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மனிதன்-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கீழ் கோத்தகிரி வனச்சரக அலுவலர் ராம்பிரகாஷ் தலைமைதாங்கினார்.

    அப்போது வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. பொதுமக்களின் சந்தேகத்திற்கு அதிகாரிகள் பதிலளித்தனர். விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சோலை மரநாற்றுகள் வழங்கப்பட்டது.

    விழிப்புணர்வு முகாமில் தேனாடு, கோக்கால், மெட்டுக்கல் கிராம பொதுமக்கள் மற்றும் தேனாடு அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், மெட்டுக்கல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மலை ரெயிலிலும் பயணித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • சிறப்பு மலை ரெயில் வருகிற 27-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    ஊட்டி,

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்ப குதிகள் மற்றும் எண்ணற்ற சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.

    இங்கு நிலவும் சுற்றுலா தலங்களை பார்க்கவும், இயற்கை அழகினை ரசிக்க வும் தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமி ன்றி வெளிநாடு களில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குவிந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கிறா ர்கள்.

    தற்போது சுதந்திர தின தொடர் விடுமுறை விடப்ப ட்டுள்ளது. இதன் காரண மாக கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்தி ற்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரி த்துள்ளது. நேற்று ஞாயிற்று க்கிழமை என்பதால் மாவ ட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், அங்கு பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டு கண்டு ரசித்தனர். மேலும் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் குடும்பத்தி னருடன் தாவரவியல் பூங்கா புல்வெளி தரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, குன்னூர் சிமஸ் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டமாகவே காணப்ப ட்டது.

    ஊட்டிக்கு வரும் சுற்று லா பயணிகள் அனைவருமே மலைரெயிலில் பயணிக்க விரும்புவார்கள். வனத்தின் நடுவே வரும் ரெயிலில், அங்குள்ள இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், வனவிலங்குகள் போன்றவற்றை ரெயிலில் இருந்தபடியே பார்த்து செல்லலாம் என்பதால் பெரும்பாலானவர்கள் அந்த ரெயிலிலேயே பயணி க்க விரும்புவர்.

    நேற்று நீலகிரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணி கள் பெரும்பா லானோர் மலை ரெயிலிலேயே பயணித்தனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சிறப்பு மலை ரெயிலும் இயக்கப்படுகிறது.

    வருகிற 27-ந் தேதி வரை இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. நேற்று சுற்றுலா வந்தவர்களில் பெரும்பா லனோர் ரெயிலிலேயே பயணித்து நீலகிரிக்கு சென்றனர். அப்போது அவ ர்கள் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணித்தனர். மேலும் சிறப்பு மலைரெயில் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    • கால்நடைகளை அடித்து கொல்லும் புலி கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் விலங்கு புலியா அல்லது சிறுத்தையா என அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேமராக்களில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவி லான வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • நீலகிரி மாவட்ட த்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவல கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவி லான வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்கா ணிப்பு குழு கூட்டம் ஆ.ராசா எம்.பி. தலைமை யில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகி யோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரண த்தினால் 6 வட்டங்களில் மழைக்கா லங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கு ம்பட்சத்தில் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண்சரிவை உடனடியாக சரி செய்யும் வகையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் போதுமான ஜே.சி.பி. எந்திரம், பவர்ஷா ஆகியவ ற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறை சார்பில் ஆம்பு லன்ஸ் வசதி, மருத்துவக்கு ழுவினர், மருந்து இருப்பு போன்ற வற்றையும் தயார்நி லையில் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் மின்சார வாரிய த்தின் மூலம் மின்கம்பங்கள், டிரா ன்ஸ்பார்மஸ் போன்ற மின்சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணி யாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட அலு வலர்கள் நிவாரண முகா ம்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு ப்பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் முதல்நிலை மீட்பாளர்க ளுக்கு பயிற்சிகள் அளி க்கப்பட வேண்டும்.

    நோடல் அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாய கரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். நகராட்சி மற்றும் நெடுஞ்சா லை பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளை தூர்வார வேண்டும். மண்சரிவு ஏற்ப டும் பகுதிகளின் அருகில் முன்எச்சரிக்கை நட வடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் மலைவாழ் மக்கள் பெருமளவில் வாழுகின்ற பகுதியில் போதுமான போக்குவரத்து, சாலை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இயற்கை இட ர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்ட த்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கலந்து கொண்டார்

    ஊட்டி,

    நீலகிரிமாவட்டம் ஜெகதளா ஊர் மக்களின் அழைப்பை ஏற்று ஜெகதளா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாலிங்கேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டார்.

    அவருக்கு ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீ மாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கப்பச்சி வினோத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயலாளர் போலன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருமூர்த்தி, குன்னூர் நகர் செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் கேத்தி ராஜு, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ஜெய் என்ற ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.
    • மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 12 ஆயிரத்து 665 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவி த்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    கொரோனா பெருந்தொ ற்றால் மாணவா்களின் கற்றலில் ஏற்பட்ட இடை வெளியை சரி செய்வத ற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்ட த்தை பள்ளி கல்வி துறை மூலம் 2021 அக்டோபா் 27-ந்தேதி தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதனால் மாவட்டம் முழுவதும் 3,737 தன்னாா்வலா்கள் இணைய வழியில் பதிவு செய்திருந்த னா். இவா்களில் 2,108 தன்னாா்வலா்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பரிந்துரை செய்ய ப்பட்டு இவா்களுக்கு உளவியல், கணினி வழித் தோ்வு மற்றும் குழுக் கலந்தாய்வு பயிற்சி அளிக்கப்பட்டு 1,814 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வடி வமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுநா் குழுவால் பயிற்சி வழங்கப்பட்டது. அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியமா்த்த ப்பட்டனா்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 1,214 தன்னாா்வலா்கள் கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், மாணவா்களின் வகுப்பு அடிப்படையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னா ா்வலா்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உயா் தொடக்க தன்னாா்வ லா்களும் மாண வா்களின் இல்லங்களுக்கு அருகி லேயே தினசரி 1 முதல் 2 மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனா். இதன் அடிப்ப டையில், நீலகிரி மாவட்ட த்திலுள்ள 4 ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் 7,652 மாணவா்க ளும், உயா்தொடக்க நிலையில் பயிலும் 5,013 மாணவா்க ளும் என மொத்தம் 12 ஆயிரத்து 665 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகி ன்றனா்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×